Daily Archives: 4:58 pm
அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்..!
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை… Read more
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் செப். 30ல் நிறைவு-ஆவணப்படுத்தும் நடவடிக்கை தீவிரம்
தமிழகத்தில் பழந்தமிழர் பெருமையை பறைசாற்றும் தொன்மை மிக்க 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. கீழடிக்கு இணையான தொன்மை மிக்க பொருட்கள், நெல்லை தாமிரபரணி நதிக்கரையோரங்களில் காணப்படும் கிராமங்களிலும் கிடைத்து வருகின்றன. பொருநை என போற்றப்படும் தாமிரபரணியின் ஆற்றங்கரையில் கொற்கை,… Read more
தேசிய ஓபன் தடகளம்: 2வது தங்கம் வென்றார் தமிழக வீரர் சந்தோஷ்
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் 2வது தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தெலங்கானா மாநிலம் வாரங்கல், நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த ராணுவ வீரரான சந்தோஷ் குமார் (23… Read more
7.5% இடஒதுக்கீட்டில் இன்ஜி., படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்
‛‛7.5 சதவீத இடஒதுக்கீட்டில் படித்து இன்ஜினியரிங் படிக்கும் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதிக்கட்டணம் மற்றும் கலந்தாய்வுக் கட்டணத்தை அரசே ஏற்கும்,” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அரசு பள்ளியில் படித்து இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்ற… Read more
பாரதியார் என்னும் சகாப்தத்துக்கு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்தில் புகைப்பட கண்காட்சி வைத்து மரியாதை
கோவை அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பாரதியார் 150 பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்து புகைப்பட கண்காட்சியை பலரும் கண்டு ரசித்தனர். பாரதியார் 150வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி… Read more
ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் இரண்டு அடுக்கு கொள்கலன் கண்டுபிடிப்பு: ஆய்வாளர்கள் உற்சாகம்
ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் இரண்டு அடுக்கு கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் வெளிநாடுகளில் பயன்படுத்திய பானை ஓடுகளின் துண்டுகளும் கிடைத்து வருவதால் கொற்கை கடல்வழி வாணிக நகரமாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளில்… Read more
மக்கள் விரோத போக்கில் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்..!!
ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக, கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்கில் ஒன்றிய அரசு செயல்படுவதாக போராட்டத்தில்… Read more
மாநிலங்களவை எம்பி தேர்தல் மபி.யில் போட்டியின்றி தேர்வாகிறார் முருகன்: காங்கிரஸ் போட்டியிடவில்லை
மத்திய பிரதேசத்தில் நடக்கும் மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தலில், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி தேர்வாக இருக்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த ஜூலையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இணையமைச்சராக… Read more