தமிழகம் Subscribe to தமிழகம்
கீழடி 5 -ம் கட்ட அகழாய்வில் மேலும் ஒரு சுற்றுச்சுவர் கண்டுபிடிப்பு!
கீழடி 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு… Read more
‘தமிழ் கற்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’!
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர் பணிபுரிகின்றனர். தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டப்படி 2 ஆண்டுக்குள் டி என் பி எஸ் சி நடத்தும் தமிழ் மொழிக்கான கட்டாயத் தேர்வில் தேர்ச்சி… Read more
“உயர்கல்வியில் சீனாவை விட தமிழகம் முன்னணியில் உள்ளது” – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!
உயர்கல்வி பெறுபவர்கள் எண்ணிக்கையில் சீனாவை விட தமிழகம் முன்னணியில் உள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதியம் (யுனிசெப்) ஆகிய அமைப்புகளின் சார்பில் ‘தரமான மற்றும்… Read more
தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக ‘தமிழ் மறவன்பட்டாம்பூச்சி’ அறிவிப்பு!
தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக ‘தமிழ் மறவன்பட்டாம்பூச்சி’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பிறப்பித்துள்ளது. மாநில பறவை, மாநில விலங்கு, மாநில மரம், மாநில பூ, பட்டியலில் தற்போது தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப் பூச்சியும் இடம்… Read more
கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடக்கத்திலேயே இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வில் அருகருகே 2 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கீழடியில் 2015-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல் பொருட் கள் கண்டறியப்பட்டன. இவற்றை பரிசோதித்ததில் 2,500… Read more
கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி தொடக்கம்!
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்க விழா நேற்று (14-06-2019) நடைபெற்றுள்ளது. தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அகழாய்வுப் பணிகளை தொடக்கி வைத்திருக்கிறார். ”2014… Read more
ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் எண்களுடன் மைல் கல் கண்டுபிடிப்பு!
திருநெல்வேலி மாவட்டம், பிரம்மதேசத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எண்கள் பொறித்த மைல் கல் கண்டறியப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் ஓர் ஊருக்குச் செல்லும் தொலைவு குறித்து மைல் கல் வைக்கப்படுவதுண்டு. இந்த மைல் கல் நடும் பழக்கம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே… Read more
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு!
திருப்புவனம் ஒன்றியத்தை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த பகுதியில் மத்திய தொல்லியல்துறை சார்பில் பண்டைய தமிழர் நாகரிகம் பற்றிய அகழ்வாராய்ச்சி பணி 2015–ம் வருடம் முதல் நடைபெற்றது. இந்த பணி தொடர்ந்து 3 கட்டங்களாக நடந்தன. கடந்த 2018–ம் வருடம் முதல்… Read more
அழிந்து வரும் 5000 ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள்! வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை!
நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் வனப் பகுதியில் உள்ள 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள் பராமரிக்கப்படாததால் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கரிக்கையூர் மலைக் கிராமம். இந்த பகுதியில்… Read more
ராஜராஜ சோழன் சமாதியை அகழ்வராய்ச்சி செய்து அறிக்கை வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!
ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை அகழாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்…. Read more