நாட்றம்பள்ளி அருகே கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நாட்றம்பள்ளி அருகில், கி.பி., 9ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, கொடையாஞ்சியில் உள்ள நிலத்தில், சலவைக்கு பயன்படுத்தி வந்த ஒரு கல் இருந்தது. இந்த கல்லில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்ததில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, கி.பி., 9ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு எனத்தெரிந்தது. அதில், இந்த நிலத்தை 1,000 பொன் கொடுத்து வாங்கி, அங்கிருந்த காசி விசுவநாதர் கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்ததை அறிய முடிந்தது. அந்த கல்வெட்டில் நிலத்தின் எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபோல, பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுவதால், இப்பகுதியில் பல கோவில்கள் இருந்துள்ளன என்பது தெரிய வருகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர்.

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

1 Responses

  1. Pingback: Balakrishnan P

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: