
3,000 பக்கங்களுக்கு மேல் தமிழ் இலக்கியத்தை வீக்கிபிடியா-வில் பதிவேற்றிய ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களை உலகத் தமிழர் பேரவை பாராட்டியது!
தமிழ் இலக்கியத்தின் அனைத்து வகைகளையும் இன்றைய காலத்திற்கேற்ப வீக்கிபிடியா கணனி இணையதளத்தில் 3,000-கும் மேற்பட்ட பக்கங்களை ஏற்றியுள்ள ஐயா திரு. செங்கைப் பொதுவன் (84) அவர்களை, அவரது சென்னை இல்லத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள், பொன்னாடை அணிவித்து புத்தகங்கள் பரிசளித்து பாராட்டினார் (04-12-2018). உடன் அவரோடு உலகத் தமிழர் பேரவையில் மகளீர் அணி பொறுப்பாளர் திருமிகு. தஞ்சை பத்மா, ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களின் துணைவியார் செங்கை செல்வி, பேரவையின் செயல் உறுப்பினர் திரு. வேலு சுபராசன், அலுவலக செயற்பாட்டாளர் செல்வி. வாசுகி இணைந்து வாழ்த்தினர்.