தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை!

தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை!

தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை சிறை பிடித்து சென்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடல் பகுதிகளில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களைச் சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் அதிகரித்து வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதனால் தற்போது வரை சுமார் 182 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் இலங்கை வசம் உள்ளன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் மீட்க முடியாத நிலையில் உருக்குலைந்து கிடக்கின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சிறைபிடிக்கும் நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 6-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை இரு படகுகளுடன் சிறை பிடித்து சென்றனர். இதனை தொடர்ந்து நேற்று ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சதீஷ், செல்வம், தினேஷ், இருளாண்டி, கோவிந்தராஜ் ஆகிய நான்கு மீனவர்களையும் அவர்கள் சென்ற விசைப்படகினையும், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தடை காலம் முடிந்த சில நாட்களிலேயே, மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை அடுத்தடுத்து சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: