சத்தமின்றி இடஒதுக்கீடு ரத்து? தியாகிகள் வாரிசு குமுறல்!

தியாகிகள், வாரிசு,இடஒதுக்கீடு, ரத்து
 
‘தியாகிகள் வாரிசுகளுக்கான- ஒதுக்கீடுகளை ரத்து செய்து, தமிழக அரசு உதாசீனப்படுத்துகிறது’ என, அவர்களது குடும்பத்தார் குற்றம் சாட்டினர்.

நாட்டின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு செம்பு பட்டயம் வழங்கி, அவர்கள் காலத்துக்கு பின், அவர்களின் வாரிசுளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.தமிழக அரசு சார்பில், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் நான்கு இடங்களும், விவசாய படிப்பில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழ் படித்தவர்கள், அரசு பள்ளியில் படித்தவர்கள் என புது புது ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. இதனால், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுக்கான ஒதுக்கீடுகளை சத்தம் இல்லாமல் அரசு ரத்து செய்துள்ளது.

latest tamil news


இது குறித்து, நாகர்கோவிலைச் சேர்ந்த தியாகி வேலாயுதன் பிள்ளை மகன் பத்மகுமார் கூறியதாவது: கடந்த 2018ல் என் மூத்த மகளுக்கு இந்த கோட்டாவில் பி.எஸ்சி., வேளாண்மை படிப்புக்கு விண்ணப்பத்தேன். ‘கட் ஆப்’ மதிப்பெண்ணில் ஏற்பட்ட சிறிய வித்தியாசத்தில் வேறு ஒரு தியாகியின் பேத்திக்கு அந்த இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு வரை இந்த ஒதுக்கீடு இருந்தது.இந்த ஆண்டு, என் இரண்டாவது மகளுக்கு விண்ணப்பிக்க, அதற்கான இணையதளத்தில் சென்றபோது இந்த ஒதுக்கீட்டை காண முடியவில்லை. இதனால், வாய்ப்பு பறிபோய் விட்டது.

அரசு புதிதாக ஒதுக்கீடுவழங்கும் போது, ஏற்கனவே உள்ள ஒதுக்கீடு பாதிக்காமல் வழங்க வேண்டும். இந்த ஆண்டிலேயே தியாகிகளுக்கான ஒதுக்கீடு கிடைக்க ஐகோர்ட் தானாக வழக்குப்பதிவு செய்து உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கான வசதி எங்களுக்கு இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி : தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: