குளக்கரை பகுதிகளில் பனை விதைகளை நட்டு வைத்து பாரம்பரியத்தை மீட்போம் என நாளைய தலைமுறை பயன்பெறத் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அருமையான தொடக்கத்தை வைத்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாகத் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே உள்ள பெரிய குளத்தில் (Shine Trichy) என்ற தனியார் அமைப்பு சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
“பனை விதைப்போம் பாரம்பரியம் காப்போம்” என்ற விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கி உள்ள தனியார் அமைப்பு, இதன் முதற்கட்ட நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகத் திருச்சி
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவராசு கலந்து கொண்டு பனை விதைகளைக் குளக்கரை பகுதிகளில் நட்டு வைத்து நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக மணிகண்டம் யூனியன் ஆஃபீஸ் பகுதி உள்ள பெரியகுளத்தில் ஆயிரம் விதைகள் நடப்பட்டு, அதன் பின்னர் இந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் பனைகளை நடத் திட்டமிடப்பட்டுள்ளது.