UAE தமிழ் சங்கம் துபாயின் தலைவர் திரு ரமேஷ் அவர்கள் தமிழக அமைச்சர்களை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினார்!

UAE தமிழ் சங்கம் துபாயின் திரு. ரமேஷ் அவர்கள் தமிழக அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக அவரவர்களது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதில் குறிப்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியம், சுற்றுசூழல் துறை அமைச்சர் திரு.மெய்யானதன் , உலகத்தமிழர் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. மஸ்தான், சுற்றுலா துறை அமைச்சர் திரு. மதிவேந்தன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அமைச்சர்களுடனான சந்திப்பு பற்றி அவர் நம்மிடம் கூறியதாவது: உலகத்தமிழர்களுக்கான நலன்கள் குறித்தும் அவர்களுக்கு வெளிநாடுகளில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் அதை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் பேசியதாக தெரிவித்தார். மேலும் உலக தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க அரசும் உதவும் என்றும் அமைச்சர்கள் கூறியதாக தெரிவித்தார்.மேலும் அமைச்சர்களுடனான இந்த சந்திப்பு மனநிறைவை தருவதாக தெரிவித்தார். சந்திப்பின்போது UAE தமிழ் சங்கம் துபாயின் பொதுசெயலாளரும் உடன் இருந்தார்.

official website link: http://www.utrustus.org
http://www.gulftamilsangam.com

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>