தமிழக மீனவர்களை ஹிந்தியில் பேச வலியுறுத்தி துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படை வீரர்கள்!

தமிழக மீனவர்களை ஹிந்தியில் பேச வலியுறுத்தி துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படை வீரர்கள்!

தமிழக மீனவர்களை ஹிந்தியில் பேச வலியுறுத்தி துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படை வீரர்கள்!

ஹிந்தியில் பேச வலியுறுத்தி தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர கடற்படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள், மீனவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மீனவர்கள் தமிழில் பதில் அளித்துள்ளனர்.

ஆனால், கடலோர கடற்படை வீரர்கள் இந்திய மீனவர்கள் என்றால் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என கூறி தாக்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் இலங்கை மீனவர்கள் என நினைத்து திடீரென ரப்பர் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில் பிச்சை ஆரோக்கியம்(38), ஜான்சன்(30) என்ற இரண்டு மீனவர்கள் காயமடைந்தனர். தற்போது கரை திரும்பியுள்ள காயமடைந்தவர்கள் இருவரும் ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கடலோர காவல்படையினர் மறுத்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கடலோர கடற்படை வீரர்களை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் தூப்பாக்கி சூடு நடத்திய கடற்படை வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: