தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழனும் அவரது மகன் இராஜேந்திர சோழனும் தான் இந்த அதிசய கோயிலை கட்டியுள்ளனர்.
ஆம்! கும்பகோணம் “தாரா சுரம்” கோயிலில்உள்ள “இசைக்கல்படிகள்” இவை. ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு “ச, ரி, க, ம, ப, த, நி” என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும். ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
இதனருமைகளை அறியாத சிலர் இதன்மீது பெரிய பெரிய கற்களை
போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது . அதனால் இப்போது இந்த படிகளை சுற்றி இரும்புவேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது.
உள்ளே சென்று இதனருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள்.
கும்பகோணத்தில் இருந்து 2 கிலோமீட்டர் பயணித்தாலே இந்த பிரம்மாண்டமான அழகிய கோயிலுக்கு செல்லலாம்.