17ம் நுாற்றாண்டை சேர்ந்த, மடப்புறம் கல்வெட்டு துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கண்டுபிடிப்பு!

17ம் நுாற்றாண்டை சேர்ந்த, மடப்புறம் கல்வெட்டு துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கண்டுபிடிப்பு!

17ம் நுாற்றாண்டை சேர்ந்த, மடப்புறம் கல்வெட்டு துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கண்டுபிடிப்பு!

துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள முரம்பனில், 17ம் நுாற்றாண்டை சேர்ந்த, மடப்புறம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

முரம்பன் பகுதியில் உள்ள மடத்துக்கு, அங்குள்ள குளத்து பாசனப்பகுதியில் இருந்து, குறிப்பிட்ட நிலம், 1668ல், தானமாக அளிக்கப்பட்டுள்ளது. அதை, கொடுத்தவரின் பெயர், கல்வெட்டில் இல்லை. மடங்களுக்கு தானமாக கொடுக்கும் நிலத்தை மடப்புறம் என்பர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்த கொடை நிலம், பன்னக்குளம், சேவல் குளம் ஆகியவற்றால் நீர் பெற்ற பகுதி. தற்போது, அக்குளங்களும், மடமும் அவ்வூரில் இல்லை. ஆனால், தர்மத்தாய் ஊரணி மட்டுமே உள்ளது. மேலும், தான நிலத்தை அபகரிப்போர், கங்கை கரையில், காராம்பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவர் என, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தென்னக தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவ தலைவர், பிரியா கிருஷ்ணன் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: