காஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள சிறுவஞ்சூர் கிராமத்தில் 14-ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த சதி கல்லை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிறுவஞ்சூரில் உள்ள சோழர் காலத்தில் கட்டபட்டதிருவாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் ஆய்வு நடைபெற்றது. அங்கே ஒரு அடி உயரம் உள்ள சதி கல் இருந்துள்ளது. இந்த கல்லை கிராம மக்கள் ’ஹரிச்சந்திரன் கல்’ என்று அழைத்து வந்துள்ளனர்.

இந்த கல்லில் இருவரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் ஆபரணங்களை அணிந்துள்ளார். கீழே மட்டும் உடை அணிந்துள்ளார். அவரது வலது கையில் வாள் உள்ளது. அந்த வாளின் முனை பூமியை நோக்கி உள்ளது. எனவே இவர் போரில் மரணமடைந்த வீரர் என்பது உறுதியாகிறது. பக்கத்தில் இருக்கும் உருவத்தில் காது மற்றும் கழுத்தில் ஆபரணங்கள் இருக்கிறது. மேலேயும், கீழேயும் உடை அணைந்துள்ளார். அவரது வலது கையில் பூ வைத்துள்ளார். இதன் மூலம் அந்த உருவம் அவர் மனைவி என்று தெரிகிறது.

மேலும் இந்த கல்லில் எந்த எழுத்துகளும் இல்லாததால் இது எக்காலத்தை சேர்ந்தது என்று கண்டறிய கடினமாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலை செதுக்கும் நுட்பங்களை வைத்து பார்க்கும்போது இது 14வது நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்லியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>