பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளின் அமைப்பு நீக்கம்! – ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்!

பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளின் அமைப்பு நீக்கம்! - ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்!

பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளின் அமைப்பு நீக்கம்! – ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

எனினும், ஹமாஸ் இயக்கத்தின் பெயர் அந்த பட்டியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கடந்த 2001ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் 13 தனிப்பட்ட நபர்களும் 22 அமைப்புகளும் அடங்கும்.

2006ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பும், 2003ஆம் ஆண்டில் ஹாமஸ் அமைப்பும் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தது.

எனினும் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப்புலிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்தை நிரூபிப்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், விடுதலைப்புலிகள் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: