ரஷ்யாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த தோப்பூர் இளைஞன்!

ரஷ்யாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த தோப்பூர் இளைஞன்!

ரஷ்யாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த தோப்பூர் இளைஞன்!

ரஷ்யாவில் நடைபெற்ற எம்.எம்.எம் குத்துச்சண்டை போட்டியில் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்ற திருகோணமலை தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் அலி முஹம்மது அஸாதை இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாழ்த்தி கௌரவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை இன்று அவரது அமைச்சில் வைத்து முஹம்மது அஸாத் மற்றும் அவரது தந்தை அப்துல் அலி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மூதூர் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் இஸ்மாயீல் மஹ்ரூப் செய்திருந்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இதன்போது, ரஷ்யாவில் நடைபெற்ற எம்.எம்.எம். குத்துச்சண்டை போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று இரு வெள்ளிப் பதக்கங்களை வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த முஹம்மது அஸாதை பாராட்டி கௌரவித்த இராஜாங்க அமைச்சர், தொடர்ந்தும் சிறப்பாக விளையாடுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் ரஷ்யாவின் குரோஸ்னி மாநிலத்தில் நடைபெற்ற 22 வயதுக்கு உட்பட்ட 57-61 கிலோ கிராம் எடைப்பிரிவில் எம்.எம்.எம். குத்துச்சண்டைப் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>