தென்னமரிக்காவில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் ஈழத் தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
தென் அமெரிக்காவின் பரகுவேயில் இடம் பெற்ற மாரதன் ஓட்ட போட்டியிலேயே யாழ்ப்பாணம், காரைநகர் பக்தர்கேணியை சேர்ந்த சிவபாலன் நவமணி தம்பதியரின் மகனான நிமலன் என்பர் சாதனை படைத்துள்ளார்.
குறித்த போட்டியில் அவர் 42 கிலோ மீட்டர் தூரத்தினை 5 மணி 23 நிமிடங்கள் 53 செக்கன்களில் கடந்து சாதனைபடைத்து இலங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இது இவரது இரண்டாவது மரதன் ஓட்ட போட்டி என்பதுடன் இவரது முதலாவது போட்டி கடந்த 2014 ஆம் ஆண்டில் கலந்து கொண்டு இதே தூரத்தினை 5 மணி 44 நிமிடங்களில் கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.