பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்குக் கடிதம்!

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்குக் கடிதம்!

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்குக் கடிதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

சில நாள்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம், ஏழுபேரின் விடுதலை தொடர்பான வழக்கில் தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனிடையே தமிழக அரசு சார்பிலும் 7 பேரின் குடும்பங்கள் சார்பிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இவர்கள் இல்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவர்களின் விடுதலை தொடர்பாக ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள கனக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக south windsor-ல் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதினர். நாச்சிமுத்து சாக்ரட்டீஸ், பிரபு ராமகிருஷ்ணன், ஜெயகணேஷ், கார்த்திகேயன் தெய்வீக ராஜன் ஆகியோர் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து, தமிழக அமைச்சரவையின் முடிவை மனிதநேயத்துடன் ஏற்கக் கோரி ஆளுநருக்குக் கடிதங்கள் அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>