தஞ்சை பெரிய கோயிலில் பாரம்பர்ய தொழில்நுட்ப முறையில் தரைதளம்!

தஞ்சை பெரிய கோயிலில் பாரம்பர்ய தொழில்நுட்ப முறையில் தரைதளம்!

தஞ்சை பெரிய கோயிலில் பாரம்பர்ய தொழில்நுட்ப முறையில் தரைதளம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தரைதளத்தில் உடைந்துபோன செங்கற்கள் வழியே தண்ணீர் உள்ளே செல்கிறது. இந்த நிலை தொடர்ந்தால்,கோயிலின் அடித்தளத்துக்கே பாதிப்பு ஏற்படும். எனவே, அக்காலத்தில் என்ன மாதிரியான கற்களைப் பயன்படுத்தி, தரை தளம் அமைக்கப்பட்டதோ, அதே போன்று கற்களைக் கொண்டு இரு அடுக்குகளாகத் தளம் அமைக்கப்படுவதோடு பாரம்பர்யத் தொழில்நுட்ப முறைப்படியும் தரைதளம் அமைக்கப்படுகிறது. இதனால் கோயிலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என இந்திய தொல்லியல்துறையின் தென்னிந்திய சரக இயக்குநர் நம்பிராஜன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழக்கு நடைபெற இருப்பதையொட்டி கோயிலைப் புதுப்பிக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளைப் பார்வையிட்ட நம்பிராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தஞ்சாவூர் பெரிய கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தரைதளத்தில் உடைந்துபோன செங்கற்கள் வழியே தண்ணீர் உள்ளே செல்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் கோயிலின் அடித்தளத்துக்கே பாதிப்பு ஏற்படும். எனவே, அக்காலத்தில் என்ன மாதிரியான கற்களைப் பயன்படுத்தி, தரைதளம் அமைக்கப்பட்டதோ, அதே போன்று கற்களைக் கொண்டு இரு அடுக்குகளாகத் தளம் அமைக்கப்படுகிறது. பாரம்பர்யத் தொழில்நுட்ப முறைப்படியும் தரைதளம் அமைக்கபடுகிறது. மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே செல்வதைத் தவிர்க்கவும், தேங்கி நிற்காமல் இருப்பதற்கும் தண்ணீர் வெளிப்புறம் செல்லும் விதமாக சாய்வான தளம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே, இப்பணியால் கோயிலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.

கோயில் கோபுரங்களில், மழை பெய்வதன் மூலம் பாசிகள் படிந்து கறுப்பாக மாறியுள்ளது. இந்தக் கற்களையும் கற்களுக்கு இடையே உள்ள இணைப்புகளையும் சிதைத்துவிடும். எனவே, பாசிகளை அகற்றுவதற்காகத் தொல்லியல் துறையின் அறிவியல் பிரிவை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில், இலகுவான வேதிப்பொருள்களைப் பயன்படுத்தி பாசிகளை நீக்கி, கோபுரம் தூய்மைச் செய்யப்படுகிறது. கோயிலில் முன்பு தோண்டப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வுகள் நடத்தி ஆலோசனை செய்யப்படும். தஞ்சாவூர் பெரிய கோயில் வளர்ச்சிப் பணிக்காக ஆண்டுதோறும் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதேபோல, வாரங்கல், காஞ்சிபுரம், கேரளத்திலும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: