ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


பாக் நீரிணைப் பகுதியில் உள்ள பாரம்பர்ய பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் செல்வது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனிடையே பிடிபடும் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க முடியாத அளவுக்கு இலங்கையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான 180-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கைக் கடற்கரைப் பகுதிகளில் பராமரிப்பு இன்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ராமேஸ்வரம் உள்ளிட்ட தென் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் வாழ வழியின்றி அவதியுற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ராமேஸ்வரத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான படகுகளே மீன்பிடிக்கச் சென்றன. இதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது படகையும் அதில் சென்ற மீனவர்கள் நாகராஜ், ஆறுமுகம், ரவி, நாகராஜன், எமிரேட்ஸ், கார்த்திக், வரகுண பாண்டியன் ஆகிய 7 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 7 பேரையும் தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கைக் கடற்படையினரின் இந்தத் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: