தேசிய அளவிலான சீனியர் ஓபன் தடகள போட்டியில் லட்சுமணன் தங்கம்!

தேசிய அளவிலான சீனியர் ஓபன் தடகள போட்டியில் லட்சுமணன் தங்கம்!

தேசிய அளவிலான சீனியர் ஓபன் தடகள போட்டியில் லட்சுமணன் தங்கம்!

சென்னையில் நடந்து வரும், தேசிய அளவிலான சீனியர் ஓபன் தடகள போட்டியில், 5,000 மீ., ஓட்டப் பந்தயத்தில், பெண்கள் பிரிவில், ரயில்வே வீராங்கனை சூர்யா; ஆண்கள் பிரிவில், ராணுவ வீரர் லட்சுமணன் ஆகியோர், முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், தேசிய அளவிலான, 57வது சீனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, நேரு விளையாட்டு அரங்கில், நேற்று துவங்கியது. அதில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 1,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்று காலை, 5,000 மீ., ஓட்டப்பந்தயம் நடந்தது. அதில், ஆண்கள் பிரிவில், ராணுவ அணி வீரர் லட்சுமணன், பந்தய துாரத்தை, 14 நிமிடம், 4.21 வினாடிகளில் கடந்து, முதலிடத்தை தனதாக்கினார். அடுத்த இரண்டு இடங்களை, ரயில்வே அணி வீரர் அபிஷேக், ராணுவ வீரர் மான் சிங் பிடித்தனர். பெண்கள் பிரிவில், ரயில்வே அணி வீராங்கனைகள் சூர்யா, சிந்தியா ஆகியோர், முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். போலீஸ் அணி வீராங்கனை சங்கீதா, மூன்றாம் இடம் பிடித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: