கோவில் குளத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன!

கோவில் குளத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன!

கோவில் குளத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன!

திருவிடைக்கழியில், கோவில் குளத்தை துார் வாரும் போது, கருங்கல் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருவிடைக்கழியில், சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தீர்த்தக் குளமான, சரவணப் பொய்கையை துார் வாரும் பணி, கடந்த வியாழனன்று துவங்கியது. பொக்லைன் இயந்திரம் மூலமாக, நேற்று முன்தினம் துார் வாரிக் கொண்டிருந்தபோது, 6 அடி உயர முள்ள முருகர் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள விநாயகர் மற்றும் அம்பாள் என, மூன்று கருங்கல் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இதையறிந்த பக்தர்கள், கண்டெடுக்கப்பட்ட சிலைகளுக்கு பூஜை செய்து, வழிபட்டனர். ‘சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தவை என, தொல்லியல் துறை மூலம் ஆய்வு நடத்த வேண்டும்’ என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: