தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி – கேரள ஆளுநர் சதாசிவம்!

தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி - கேரள ஆளுநர் சதாசிவம்!

தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி – கேரள ஆளுநர் சதாசிவம்!

தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி என்பதால்தான் இறை மொழி என்கிற பெருமை பெற்றுள்ளதுடன், இணையத்திலும் கோலோச்சி வருகிறது என்று கேரள மாநில ஆளுநர் சதாசிவம்  கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 5-ஆம் ஆண்டு உலகத் தமிழர் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப்  பேசுகையில் இதனைக் கூறினார். உலகில் உள்ள மூத்த எட்டு மொழிகளில் தமிழ்  செம்மொழி என்கிற பெருமை பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட அவர்,  தனது பதவி காலம் முடிய இன்னும் 8 மாதங்களே உள்ளது என்றும்,  ராஜ்பவனில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்ததுடன்,  எவர்சில்வர் பொருட்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததையும் நினைவு கூர்ந்தார்.  நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோது பிரபல நிறுவனங்களில் இருந்து பணியாற்ற அழைத்தனர் என்றும் குறிப்பிட்டார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: