![latest tamil news](https://img.dinamalar.com/data/gallery/gallerye_135044225_2843614.jpg)
அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் எனவும், பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
* வேலை வாய்ப்பகம் வழியாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை .
* கொரோனாவால் அரசுப் போட்டித்தேர்வுகள் தாமதமானதால் போட்டித்தேர்வுகளில் நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும்.
* பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்.
* தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.