கேரள நிவாரண நிதிக்கு அ.தி.மு.க எம்.பி. எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள்! – முதல்வர் அறிவிப்பு!

கேரள நிவாரண நிதிக்கு அ.தி.மு.க எம்.பி. எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள்! - முதல்வர் அறிவிப்பு!

கேரள நிவாரண நிதிக்கு அ.தி.மு.க எம்.பி. எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள்! – முதல்வர் அறிவிப்பு!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு அ.தி.மு.க எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரளா மாநிலம் சிக்கி தவிக்கிறது. நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை,வெள்ளபாதிப்புகளுக்கு உதவும் வகையில், அண்டை மாநிலங்கள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, ஒருமாத ஊதியத்தை கேரளா நிவாரண நிதிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின்னர் சென்னை திரும்புவதற்காக நேற்று மாலை 4.30 மணியளவில் கோவை விமான நிலையம் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:–

கோவை மாவட்டம் வால்பாறையில் ஏற்பட்டுள்ள மழை சேதங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து உள்ளனர்.

வால்பாறைக்கு செல்லும் சாலையில் 63 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதை சீர் செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அவற்றிற்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

கேரளாவுக்கு கடந்த 10–ந் தேதி 5 கோடி ரூபாயும், மேலும் 5 கோடி ரூபாயும் நிவாரண நிதியாக அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் 21 லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கேரளாவுக்கு அரசின் சார்பிலும் பொதுமக்களிடம் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அனைத்து தரப்பு மக்களும் அவரவர் சக்திக்கு ஏற்றவாறு நிவாரண நிதி வழங்க வேண்டும்.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களின் ஒருமாத சம்பளத்தை கேரள மாநில நிவாரண நிதிக்கு அளிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். ஏற்கெனவே தமிழக அரசு சார்பில், கேராளவுக்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: