இலங்கை சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம், மண்டபம் மற்றும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 68 பேரை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அவர்களது விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். சிறைபிடிக்கப்பப்ட தமிழக மீனவர்கள் அனைவரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கை சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்; இலங்கை சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 75 மீன்பிடி படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்நிலை பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்த வேண்டும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீனவர்களை விடுவித்து அவர்களின் குடும்பங்களுடன் இணைவதை உறுதி செய்திட வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: