பழங்காலத்தைச் சேர்ந்த முருகர் கற்சிலை கல்பாக்கம் அருகே கண்டுபிடிப்பு!

பழங்காலத்தைச் சேர்ந்த முருகர் கற்சிலை கல்பாக்கம் அருகே கண்டுபிடிப்பு!

பழங்காலத்தைச் சேர்ந்த முருகர் கற்சிலை கல்பாக்கம் அருகே கண்டுபிடிப்பு!

கல்பாக்கம் அடுத்த, விட்டிலாபுரத்தில் உள்ள தாமரைக்குளம், அண்மையில் துார்வாரப்பட்டது. இப்பணி முடிந்த நிலையில், குளத்தின் ஒரு பகுதி மண்மேடு, சமீபத்திய மழையில் கரைந்தபோது, அங்கு புதைந்திருந்த கற்சிலை வெளிப்பட்டு உள்ளது. பல நாட்களாக கிடந்த நிலையில், இப்பகுதியை நேற்று கடந்தவர்கள் கண்டு, இது குறித்து, வருவாய்த் துறையினரிடம் தெரிவித்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர், வரதராஜன், நெரும்பூர் வருவாய் ஆய்வாளர், சுமதி ஆகியோர், சிலையை பார்வையிட்டபோது, பீடம் தவிர்த்து, 3 அடி உயரத்தில், வேல், மயிலுடன் முருகர் கற்சிலை, சேத நிலையில் இருந்தது. இங்கு, பழங்கால கோவில் இருந்ததன் அடையாளமாக, பண்டைய செங்கல் கற்கள் கிடந்தன. அவர்கள், சிலையை மீட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: