
1965- ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகிகள் பட்டியல்!
1. நடராசன், இறப்பு – 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.
2. தாளமுத்து, இறப்பு – 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.
3. கீழப்பழுவூர் சின்னச்சாமி, பிறப்பு – 30.7.1937, இறப்பு – 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.
4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு – 26.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன், பிறப்பு – 27.12.1931, இறப்பு – 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.
6. சிவகங்கை இராசேந்திரன், மாணவர். பிறப்பு – 16.7.1945, இறப்பு – 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.
7. கீரனூர் முத்து, பிறப்பு – 15.1.1943, இறப்பு – 27.1.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.
8. சத்தியமங்கலம் முத்து, பிறந்த ஆண்டு – 1943, இறப்பு – 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.
9. ஆசிரியர் வீரப்பன், பிறப்பு – 1.4.1938, இறப்பு – 11.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.
10. விராலிமலை சண்முகம், பிறப்பு – 11.8.1943, இறப்பு – 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.
11. கோவை பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர், பிறந்த ஆண்டு – 1944, இறப்பு – 2.3.1965, பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.
12. மயிலாடுதுறை சாரங்கபாணி, பி.காம்.மாணவர், பிறந்த ஆண்டு – 1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.
சனவரி – 25 மொழிப்போர் ஈகியர் நாளில், உயிர் நீத்த ஈகியரை நெஞ்சிலேந்துவோம்!
- கதிர் நிலவன்