கிருஷ்ணகிரி அருகே 600 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 600 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 600 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி பஞ்சாயத்தில் கனகமுட்லு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பின்புற வயலில், உடைந்த நிலையில் கிடந்த மூன்று கல்வெட்டு துண்டுகளை வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கண்டறிந்தனர். இந்த குழுவுடன் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். காப்பாட்சியர் கூறுகையில், கல்வெட்டு 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

விஜயநகரர் காலத்தில் பையூர் பற்றில், கனக்கமுட்டல் என்ற பெயரில் இந்த ஊரை அமைத்த செய்தியை இந்த கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்வூரே தற்போது கனகமுட்லு என்று மருவி அழைக்கப்படுகிறது. பையூர்பற்று என்ற வார்த்தை காவேரிப்பட்டணம் அடுத்த நெடுங்கல்லில் 650 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளதால், அதன் தொடர்ச்சியாக வந்த படைத்தளபதியின் வெற்றிகளைக் குறிக்கிறது. கல்வெட்டு உடைந்தாலும், சில பகுதிகள் கிடைக்காததாலும் இதில் உள்ள தகவலை முழுமையாக தெரிந்துகொள்ள முடியவில்லை, என்றார். வரலாற்று ஆவணக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், உறுப்பினர்கள் டேவீஸ், ரவி, காவேரி, மதிவாணன், கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: