2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடனமாடும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை மலையின் மீது, 600 அடி உயரத்தில், பெருமாள் கோவிலின் பின்புறம், பாறையின் கீழ் புறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துதல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

மலை அடிவாரத்தில் உள்ள கோவில் அருகில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடுகளின் துண்டுகளும், நான்கு பேர் கைகோர்த்து நடனமாடும் ஓவியமும் வரையப்பட்டுள்ளன. இதில், இருவர் மேற்கு நோக்கியும், இருவர் கிழக்கு நோக்கியும் ஓவியம் நடனமாடும்படி உள்ளது. அருகே மூன்று நடுகற்கள் உள்ளதாகவும், அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறினார். அடுத்ததாக, பாறையின் மேற்கு பகுதியில், ஓர் வீரன் கேடயத்தோடு வாள் வைத்து போரிடுவது போல், வெண்சாந்து ஓவியம் வரையப்பட்டுள்ளது. அவன் இடையில், ஓர் வாள் கச்சை இருப்பதும் தெளிவாக வரையப்பட்டுள்ளது. இவனுக்கு எதிரே உள்ள வீரன் போரிடுவது, பாறையின் அடுக்கு அரிக்கப்பட்டு மறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: