லண்டனில் வசித்து வரும் சிங்களத்தவர்கள், தமிழர்களிடம் தள்ளுமுள்ளு!

லண்டனில் வசித்து வரும் சிங்களத்தவர்கள், தமிழர்களிடம் தள்ளுமுள்ளு!

லண்டனில் வசித்து வரும் சிங்களத்தவர்கள், தமிழர்களிடம் தள்ளுமுள்ளு!

லண்டனில் இன வேறுபாட்டக்கு எதிரான பேரணியொன்று அவர்களின் உரிமைகளுக்கான அமைப்பினதும், தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினதும் இணை ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த பேரணி நேற்று பறை இசையுடன் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளையும், இன வேறுபாட்டக்கு எதிரான முழக்கம் எழுப்பியவாறு பலபேரைக் கொண்ட தமிழர்கள் குழுவால் முன்னெடுக்கப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


எனினும் இந்த பேரணியின் போது இலங்கை சிங்க கொடியையும், விமல் வீரவங்சவின் படத்தையும் தாங்கி வந்த மற்றுமொரு குழுவினருக்கும், இனத்துவேசத்திற்கு எதிரான போராட்டத்தினை மேற்கொண்ட குழுவினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, இரு குழுவினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிலவரம் அறிந்து காவல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இருதரப்பும் வேறு வேறு திசைகளில் நின்று பங்கு கொள்ளலாம் என கூறப்பட்டதுடன் நிலைமை சீராக்கப்பட்டது. மேலும் தொழிற்சங்களால் ஒருங்கிணைக்கபட்ட இந்த பேரணியில் தமிழர்கள் பங்கெடுக்க எந்த தடையும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: