இரு பிரதமர்களை கொண்ட கோமாளி நாடாகிறதா இலங்கை? பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கே மறுப்பு!

இரு பிரதமர்களை கொண்ட கோமாளி நாடாகிறதா இலங்கை? பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கே மறுப்பு!

இரு பிரதமர்களை கொண்ட கோமாளி நாடாகிறதா இலங்கை? பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கே மறுப்பு!

இலங்கை பிரதமராக தான் நீடிப்பதாக இலங்கை பிரதமர் பதவிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது :

”இலங்கையின் பிரதமராக உங்களை சந்திக்கிறேன். இலங்கையின் பிரதமராக நான் தான் நீடிக்கிறேன். பிரதமராகவே செயல்படுவேன். இலங்கையின் அரசியலைப்பின் சட்டப்படி சிறிசேனாவால் என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது. அவர் என்னை நாடாளுமன்றத்திலிருந்து மட்டுமே நீக்க முடியும். தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார். இந்த சூழலில் ஆளும் விக்ரமசிங்கே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே வெள்ளிக்கிழமை பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: