இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார் ராஜபக்சே!

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார் ராஜபக்சே!

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார் ராஜபக்சே!

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, அந்நாட்டின் புதிய எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து தனது அலுவல் பணிகளை தொடங்கினார்.

இலங்கையில் கடந்த மாதம் நடைபெற்ற அரசியல் மாற்றத்தை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து சுதிந்திரா கூட்டணியின் செய்தி தொடர்பாளர் கரு. ஜெயசூர்யா, இலங்கையின் முன்னாள் பிரதமரும், குருனெகலே மாவட்ட எம்.பி-யுமான மகிந்த ராஜபக்‌ஷே புதிய எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

எனினும், ஆர். சம்பந்தன் தனது அலுவல் பணிகளை தொடர்ந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் எதிர்க்கட்சி தலைவருக்கான அனைத்து அலுவல் பணிகளையும் ஆர். சம்பந்தன், ராஜபக்சேவிடம் ஒப்படைத்தார்.

அதை தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு தலைநகர் கொழும்புவில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே வந்தார். அதை தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக காலை 8.45 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார் என செய்தி தொடர்பாளர் கரு. ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: