Monthly Archives: September 2021
சுதந்திர போராட்ட வீரர் ஐயா திரு. வி. கல்யாண கலியாணசுந்தரனார் நினைவு நாளில் ஐயா நாட்டிற்கு ஆற்றிய தொண்டை போற்றி வணங்குவோம்!
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 – செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். வாழ்க்கைச்… Read more
27 ஆண்டுகளுக்குப் பிறகு 11–வது உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் நடக்க வாய்ப்பு! 22–ந் தேதி ஆய்வுக்குழு ஆலோசனை
27 ஆண்டு க ளுக்குப் பிறகு,தமிழ்நாட்டில் 11–வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாதம் 22–ந் தேதி இது குறித்து உயர்நிலை ஆய்வுக் குழு ஆலோசனை நடத்துகிறது. உலகத் தமிழ் மாநாடு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது…. Read more
ராமசாமி படையாச்சியார் 104வது பிறந்தநாள் – அமைச்சர்கள் மரியாதை
ராமசாமி படையாச்சியார் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை கிண்டியில் ராமசாமி படையாச்சியார் திருவுருவ படத்துக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நன்றி : தினகரன்
கீழடி அருகே அகரத்தில் அகழாய்வின் போது மேலும் 3 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு
கீழடி அருகே அகரத்தில் அகழாய்வின் போது மேலும் 3 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3 அடுக்கு கொண்ட ஒரு உறை கிணறு, 2 அடுக்கு கொண்ட இரண்டு உறை கிணறுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 4 உறை கிணறுகள் கிடைத்த நிலையில் தொல்லியல்… Read more
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நோயாளியின் உதவியாளர்களுக்கு பிரத்தியேக உணவு அறை: டீன் தகவல்
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கூறியதாவது: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் உள்நோயாளியாக 3,400 தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை பெறும் ஒவ்வொரு நோயாளியும்… Read more
சென்னை மெரினா கடற்கரையில் மணல் திருட்டு குறித்து விசாரிக்க குழு: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னையைச் சேர்ந்த மீனவர் நலசங்கத்தை சேர்ந்த கே.ஆர்.செல்வராஜ் குமார் சார்பில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்மனுவில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மணல் எடுத்திருப்பதும் கட்டிடக் கழிவுகளை கொட்டியிருப்பதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ன் கீழ்… Read more
திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோயில்களில் 3 வேளை அன்னதான திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோயில்களில் 3 வேளை அன்னதான திட்டத்தை தலைமைச்செயலகத்தில் காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர். நன்றி… Read more
தமிழகத்தில் சமூக நீதியை கண்காணிக்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் சமூக நீதியை கண்காணிக்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் என முதல்வர் கூறியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகள், நியமனத்தில் சமூக நீதி அளவுகோலை கண்காணிக்க இந்த… Read more
புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: ஆளுநர் தமிழிசை உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நன்றி : தினகரன்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு: ரூ.90 கோடி வரி ஏய்ப்பு: முதல் தகவல் அறிக்கையில் தகவல்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை விட 654 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு சொந்தமாக உள்ள 28 இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்… Read more