’கீழடி’ அகழ்வாராய்ச்சி நூலை வெளியிட்டார் அமைச்சர் பாண்டியராஜன்!

’கீழடி’ அகழ்வாராய்ச்சி நூலை வெளியிட்டார் அமைச்சர் பாண்டியராஜன்!

வைகை நதி தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்பு மிக்க கீழடி, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இங்குதான் மிகப்பெரிய அளவில் அகழாய்வு நடைபெற்றது.

40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும், சங்கத்தமிழ் ஆா்வலா்களும் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.

தற்போது, கீழடி கிராமம் அகழ்வாராய்ச்சி குறித்து வரும் ’கீழடி’ என்ற நூலை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் வெளியிட்டுள்ளார்.

மாஃபா பாண்டியராஜன் கீழடியில் மார்ச் 2020-ஆம் ஆண்டுக்குள் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்பதை கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: