கீழடி 5 -ம் கட்ட அகழாய்வில் மேலும் ஒரு சுற்றுச்சுவர் கண்டுபிடிப்பு!

கீழடி 5 -ம் கட்ட அகழாய்வில் மேலும் ஒரு சுற்றுச்சுவர் கண்டுபிடிப்பு!

கீழடி 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது.

ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. அதற்பின் அடுத்த, அடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் 5 அடி உயரம் கொண்ட உறை கிணறு மற்றும் நேர் சுவர் ஆகிய தொன்மையான சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் மிகவும் தொன்மையான சுடுமண்ணாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள், சுடுமண் பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொன்மையான பொருள்களும் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறை ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது போன்ற சுவர்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தால்தான் இது எந்த மாதிரியான சுவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: