400 ஆண்டு பழமையான கல்வெட்டு வேப்பனஹள்ளி அருகே கண்டுபிடிப்பு!

400 ஆண்டு பழமையான கல்வெட்டு வேப்பனஹள்ளி அருகே கண்டுபிடிப்பு!

வேப்பனஹள்ளி அருகே 400 ஆண்டு பழமையான தலைவனுக்காக இறந்த குதிரை வீரனுக்கு அமைக்கப்பட்ட நடுக்கல்லுடன் கூடிய கல்வெட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம் கோடிப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குட்டப்பள்ளி என்ற இடத்தில் குதிரை வீரன் நடுகல்லுடன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கமாக நடுகல் மட்டும் அதிகமாக காணப்படும். நடுகல்லுடன் சேர்ந்து கல்வெட்டு அரிதாக காணப்படும். இந்த நடுகல்லோடு கூடிய கல்வெட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 4 அடிக்கு 6 அடி அளவில், நடுகல் வீட்டோடு அமைந்துள்ளது. இதில் தலைவன் சண்டையிடுவது போலவும், போரில் தலைவன் வீழ்ந்து இறந்ததையும், குதிரையும் மாண்டு போனதையும் சிறப்பாக காட்டியுள்ளனர்.

புதுப்பற்றில் உள்ள பல்லேரிப்பள்ளியில், தலைவனுடன் பாதுகாப்புக்கு குதிரை வீரன் செல்லும்போது, தலைவனை கொல்ல எதிரிகள் குதிரையுடன் வருகிறார்கள். தலைவனை காப்பாற்ற வீரன் எதிரியின் குதிரையை கொன்று அவர்களை வீழ்த்தி தானும் தன் குதிரையுடன் இறக்கிறான். இப்படி தலைவனுக்கான இறந்த வீரனின் சந்ததிக்கு பெரிய ஏரிக்கரையில் உள்ள நிலத்தை ஊர் மக்கள் தானமாக கொடுக்கிறார்கள். இது வீரனின் பரம்பரை, பரம்பரையாக இவர்களுக்கானது என்ற வாசகம் தெளிவாக குறிப்பிடுகிறது.

இறந்து போனவன் சிவபக்தன் என்பதை காட்டும் வண்ணம் மேற்பகுதியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவரும் உடன்கட்டை ஏறிய இவரின் மனைவியும் சிவலோகத்தை அடைவதும் காட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு, 350லிருந்து 400 ஆண்டுகள் பழமையானதாகும்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: