“இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வேண்டும்” – பிரதமர் நரேந்திர மோதி!

“இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வேண்டும்” – பிரதமர் நரேந்திர மோதி!

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை தருவது தொடர்பாக இந்தியா வந்திருக்கும் இலங்கை பிரதமர் மகிந்த ராசபக்ச சந்திப்பின்போது வலியுறுத்தியதாக செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

“இலங்கை தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு உணரும் என நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராசபக்ச 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருடன் அமைச்சரவை சகாக்கள், அதிகாரிகள் என 10 பேர் அடங்கிய உயர் நிலைக் குழுவும் வந்திருந்தனர்.

இந்த பயணத்தின் போது வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரியவந்துள்ளது.

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பிற்கு பின் பேசிய பிரதமர் மோதி, “இந்தியாவும், இலங்கையும் நெருங்கிய நண்பர்கள். இரு நாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. நமது பிராந்தியத்தில் தீவிரவாதம் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இருநாடுகளும் இதற்கு எதிராகப் போராடி வருகிறோம். மேலும் ஒன்று சேர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் குறித்துப் பேசிய மோதி, அத்தாக்குதல் இலங்கைக்கு மட்டுமல்ல மனிதத்திற்கே எதிரான தாக்குதல் என்று குறிப்பிட்டார்.

ராசபக்ச குடும்பத்தினர் சீன ஆதரவுப் போக்கு உடையவர்கள் என்று கருத்து நிலவி வந்த நிலையில் மகிந்த ராசபக்ச, கோட்டாபய ராசபக்ச ஆகியோர் இந்தியா வருவது அரசியல் நோக்கர்களை இந்த விஷயத்தைக் கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.

தொடர்ந்து ராசபக்ச உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி, காசி விஸ்வநாதர் கோயில், சார்நாத் பௌத்த ஆலயம், கயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு சென்று வசிக்க உள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: