தமிழக வீரர் லட்சுமணன், 22-வது ஆசிய தடகளத்தில் 10,000 மீ., ஓட்ட பந்தயத்திலும் முதலிடம் பிடித்து 2-வது தங்கத்தை வென்றார்!

தமிழக வீரர் லட்சுமணன், 22-வது ஆசிய தடகளத்தில் 10,000 மீ., ஓட்ட பந்தயத்திலும் முதலிடம் பிடித்து 2-வது தங்கத்தை வென்றார்!

தமிழக வீரர் லட்சுமணன், 22-வது ஆசிய தடகளத்தில் 10,000 மீ., ஓட்ட பந்தயத்திலும் முதலிடம் பிடித்து 2-வது தங்கத்தை வென்றார்!

தமிழக வீரர் லட்சுமணன், நேற்று நடந்த 10,000 மீ., ஓட்டத்தில் முதலிடம் பெற்று, 22-வது ஆசிய தடகளத்தில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் அசத்திய மற்றொரு இந்திய வீரர் கோபி, வெள்ளி வென்றார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் அர்ச்சனா ஆதவ் (800 மீ., ஓட்டம்), சுவப்னா பர்மான் (ஹெப்டதலான்) தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இதன் ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் லட்சுமணன், கோபி, காளிதாஸ் ஹிரேவ் பங்கேற்றனர். இதில் பந்தய துாரத்தை 29 நிமிடம், 55.87 வினாடியில் கடந்து தமிழக வீரர் லட்சுமணன், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இவர், 2-வது தங்கம் வென்றார். முன்னதாக 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். தவிர இது, ஆசிய தடகளத்தில் இவரது 4-வது பதக்கம். கடந்த 2015-ல் சீனாவின் உகான் நகரில் நடந்த ஆசிய தடகளத்தில் ஒரு வெள்ளி (10,000 மீ.,), ஒரு வெண்கலம் (5,000 மீ.,) கைப்பற்றினார்.

10,000 மீ., ஓட்ட பந்தயத்தில் அசத்திய மற்றொரு வீரர் கோபி (29 நிமிடம், 58.89 வினாடி), 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இவர், கடந்த ஆண்டு அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டு 10,000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: