தோழர் தமிழரசன் … (இன்று நினைவு தினம்)

தோழர் தமிழரசன் ... (இன்று நினைவு தினம்)

தோழர் தமிழரசன் … (இன்று நினைவு தினம்)

மக்கள் புரட்சியை விரும்பியவர்.. மக்களோடு வாழ்ந்தவர்.. முந்திரிக்காடுகளில் விளையும் அனைத்து முந்திரிகளையும் பெரும் முதலாளிகள் சுரண்டி கொழுத்த பொழுது அதற்கு எதிராக மக்களை திரட்டி கூட்டுறவு முந்திரி பண்ணை அமைக்க பாடுபட்டவர்.. பல முறை அரசிடம் போராடியவர்.. தமிழ் நாடு விடுதலையை இலக்காக கொண்டு போராடிய தலைவர் வங்கி கொள்ளை முயற்சியில் படுகொலை செய்யப்பட்டார்.. பின்னர் தமிழரசன் தான் என மக்கள் கண்டு கொண்டதும் கண்ணீர் விட்டு அழுது அவருடைய இறுதி ஊர்வலத்தில் சுமார் 50 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.. ஒரு ஆயுத போராளி மக்கள் மத்தியில் மக்களுக்காக வாழ்ந்தது, மக்களுக்கான அரசியலை முன் மொழிந்தது, மக்களை திரட்டியது எல்லாம்.. அவருடைய இறுதி ஊர்வலத்தின் மூலம் உலகறிந்தது..

மீன்சுருட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சகோதரி கலிங்கராணியை கற்பழித்துப் படுகொலை செய்த சாதிவெறி நிலப்பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த (லிங்கையாத் தேவரின் மகன்) இளவலை அம்பலப்படுத்தியும், தண்டிக்கக் கோரியும் போராட் டங்கள் நடத்தியதோடு மட்டுமல்ல. அதற்காகவே மீன்சுருட்டியில் சாதிஒழிப்பு மாநாட்டை நடத்தி, சாதிஒழிப்புக்கான கொள்கை அறிக்கையையும் வெளியிட்டவர் தோழர் தமிழரசன். தான் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய விடுதலைக்கு சாதிமுறை பெரும் தடையென்பதையும், அதை ஒழிக்க தனித் திட்டமும் வேண்டுமென்றும் உணர்வுபூர்வமாக பாடுபட்டார். அவர் உயிரோடு இருந்தவரை அப்பகுதியில் வன்னியர் சங்கத்தை காலூன்ற விடவில்லை.


தமிழ்தேசியம் தழைத்தோங்கிய பகுதியைச் சேர்ந்தவன் என்ற முறையில் தமிழ் தேசியம் பற்றிய சில நிகழ்வுகளை இங்கு பதிவு செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் ஊடகங்களில் சரியாக வெளிக்கொணரப்படவில்லை என்பது மட்டும் அல்லாமல் இதனை திரித்து பொய்க்கதை எழுதி மறக்கடித்தப் பெருமையும் வெகுஜன ஊடகங்களுக்கு உண்டு.1947 விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் ஆதிக்க சாதி பண்ணைக்காரர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலக்கட்டத்தில் இந்தியாவெங்கும் இடதுசாஇயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்த இயக்கங்களின் செயல்பாடு தீவிரமாகி 1960களின் பிற்பகுதியில் மேற்குவங்காளத்தில் மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் அமைப்பான மக்கள் யுத்தக் குழுதோன்றியது. இந்த அமைப்பு மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் பரவியது. குறிப்பாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் இந்த அமைப்பு வேகமாக வளர்ந்தது.கடலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், பென்னாடம், தருமபுரி போன்ற பின் தங்கிய கிராமங்களில் தான் இந்த இயக்கம் வளர துவங்கியது. இதற்கு இந்தப் பகுதியில் நிலவிய சமூக, பொருளாதார சூழலும் முக்கிய காரணம். வடமாவட்டங்களில் பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். இந்தப் பகுதியின் முக்கிய பொருளாதாரம் முந்திரி. முந்திரி வருடம் முழுக்க மகசூல் கொடுக்க கூடிய பயிர் அல்ல. வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே முந்திரி கிடைக்கும். பிறகு சீண்டுவார் இல்லை. இந்த முந்திரி காடுகளும் சிறு விவாசாயிகள் சொந்தமாக வைத்துக் கொள்ளக்கூடியவை அல்ல. பெரும் பண்ணைக்காரார்கள் வசம் தான் நிலங்கள் இருந்தன.இப்பகுதியின் பெரும்பான்மை மக்களான வன்னிய, தலித் மக்கள் இந்தப் பண்ணைக்காரர்களின் நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாக இருந்து வந்தனர். பிற மாநிலங்களில் பண்ணைக்காரர்கள் – அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையேயான போராட்டம் வெடித்த பொழுது இப்பகுதியிலும் இந்தப் போராட்டம் வேரூன்ற தொடங்கியது. நக்சலைட் இயக்கங்களும் தமிழ் மண்ணில் அறிமுகமாகின.நக்சலைட் இயக்கமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் பின் தமிழ் தேசியமாக, ஆயுதப் போராட்டம் மூலம் தமிழ் தேசியத்தை அடையும் இயக்கமாக உருவெடுத்தது. தமிழகத்தின் முதல் குண்டுவெடிப்பும் இப்பகுதியில் தான் நடந்தேறியது. அதனை அறிமுகப்படுத்தியர் பென்னாடத்தைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள். பள்ளி ஆசிரியராக இருந்த புலவர் கலியபெருமாள் “மக்கள் யுத்தக் குழு” இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். மேற்குவங்க நக்சலைட் தலைவர் சாரு மஜும்தாருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.புலவர் கலியபெருமாள் மூலமாக நக்சலைட் இயக்கம் வடமாவட்டங்களில் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு புலவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்ட பொழுது அந்த குண்டுகள் வெடித்ததால், தீவிரவாத இயக்கம் பற்றிய செய்திகள் வெளிவரத்தொடங்கின. அவர் மீது கொலைக்குற்றம் போன்ற பொய்வழக்குகள் சுமத்தப்பட்டு அரசு அவரை சிறையில் அடைத்தது.நக்சலைட் இயக்கத்தின் திருப்பு முனையாக இத் தருணத்தில் தோழர் தமிழரசன் உருவாகினார். 1980களில் இந்த இயக்கம் மிக வேகமாக வளர முக்கிய காரணம் தோழர் தமிழரசன் தான். இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் அவர் உயர்ந்தார். சாதியில்லா சமுதாயம் அமைப்பது, பண்னை நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுப்பது போன்றவை இவரின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. அதே சமயத்தில் தமிழ் தேசியம், தனித் தமிழ்நாடு போன்ற கோரிக்கைகளில் நம்பிக்கை உடையவராக தமிழரசன் விளங்கினார்.1985ம் ஆண்டு தமிழ் ஈழத்திற்கு ஆதராக தமிழகத்தில் உணர்வு அலைகள் கரைபுரண்ட பொழுது, தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்றோர் தங்களை தமிழ்தேசிய உணர்வுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இதனால் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் இருவரும் நீக்கப்பட்டனர்.
இதன் பிறகு தமிழ்நாடு மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியை இருவரும் துவங்கினர். இக் கட்சியின் ஆயுதப் பிரிவாக “தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA)” என்ற அமைப்பை தோழர் தமிழரசன் தோற்றுவித்தார்.பொறியியல் பயின்ற தோழர் தமிழரசன் குண்டுகள் தயாரிப்பதிலும் வல்லவராக இருந்தார். 1985ம் ஆண்டு துவங்கி 2000வரை கணக்கெடுத்தால் தமிழத்தின் பல இடங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை இந்த இயக்கம் நடத்தியது. மைய அரசின் தளங்களை தான் இந்த அமைப்பு குறிவைத்து தாக்கியது. தனித்தமிழ்நாட்டை உருவாக்கி அங்கு சாதிபேதமில்லா சமதர்ம சமுதாயத்தை அமைப்பது தான் தன்னுடைய லட்சியம் என்று தமிழரசன் முழங்குவார். பண்ணைக்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்தையும், பொருளையும் ஏழைகளுக்கு அளிப்பார். மக்களை தமிழரசன் மிகவும் நேசித்தார். மக்களுக்காக வாழ்வது தான் அவரது லட்சியமாக இருந்தது.1987ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் நாள் பொன்பரப்பி கிராமத்தில், தன் இயக்கத்திற்கு பொருள் சேர்ப்பதற்காக தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார். பொன்பரப்பியில் இருந்த ஸ்டேட் பாங்க் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வெளியேறும் பொழுது அவரை அடையாளம் தெரியாமல், அவர் “தோழர் தமிழரசன்” தான் என்று தெரியாமல் ஊர் மக்கள் தாக்கினர். அப்பொழுது அவரிடம் குண்டுகளுடன் துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுட்டிருந்தால், மக்கள் ஓட்டம்பிடித்திருப்பர். குறைந்தபட்சம் அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுடப்போவதாக நீட்டியிருந்தால் கூட மக்கள் நெருங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் தன் மக்களை மிகவும் நேசித்த தோழர் அவர்களை சுடப்போவதாக கூட சொல்ல வில்லை. எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களின் கையில் அடிபட்டு இறந்தார். இதை விட ஒரு சோகமான விடயம் பொன்பரப்பி தமிழரசனின் சொந்த கிராமம். தன்னை வெளிப்படுத்தினால் எங்கே தன்னை ஒரு கொள்ளையனாக தன் ஊர் மக்கள் நினைத்து விடுவார்களோ என்று எண்ணி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே தோழர் மறைந்து போனார்.கொல்லப்பட்டது தமிழரசன் தான் என்று பிறகு கேள்விபட்டவுடன் பொன்பரப்பிலும், பிற கிராமங்களிலும் நிலவிய சோகம் இன்றும் என் நினைவில் நிற்கிறது. இப்பகுதி மக்கள் தமிழரசனை நேசித்தனர். அவரது முகம் கூட தெரியாமல் அவரது சேவைகள் மட்டுமே பலர் நினைவில் இருந்தது. இன்றும் நிற்கிறது.தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்டம் இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தமற்றவையாக தெரியலாம். ஆனால் 1980களில் இப் பகுதியில் நிலவிய வறுமை, அறியாமை போன்றவையுடன் பொருத்தி பார்த்தால் அவருடைய போராட்டத்தின் பொருள் விளங்கும்.தமிழகத்தின் அத்தனை ஊடகங்களும் இந்த நிகழ்ச்சி குறித்து பொய்க்கதைகளை தான் அவிழ்த்து விட்டனவே தவிர ஒரு பத்திரிக்கை கூட உண்மை நிலையை எழுதவில்லை.தமிழக வரலாற்றில் மக்களை நேசித்த மாமனிதர்கள் பட்டியலில் தமிழரசனின் பெயர் முக்கியமானது.


தோழர் தமிழரசன் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதேன் ?

கடந்த எனது பதிவில் தோழர் தமிழரசன் மாவீரர் இல்லையா எனக் கேட்டிருந்தேன். இதைப் படித்த ஒரு அன்பர் மக்களைக் கொன்ற தமிழரசன் ஒருபோதும் மாவீரர் ஆக முடியாது என்று எனக்கு தகவல் அனுப்பியிருந்தார். ஆனால் வேடிக்கை என்னவெனில் அந்த அன்பர் பிரபாகரன் மாவீரர் என தனது முகப்பு பக்கத்தில் போட்டிருக்கிறார்.

பிரபாகரன் ஆரம்பத்தில் குரும்பசட்டி என்னும் இடத்தில் ஒரு தனியார் வீட்டில் கொள்ளையடித்த வரலாறு பலருக்கு தெரியவில்லை. குரும்பசட்டியில் ஒரு தனியார் வீட்டில் அடைவு வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு பிரபாகரன் வெளியே வந்தபோது அங்கே சுருட்டு சுற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பிரபாகரனை கல்லால் தாக்கினார்கள். பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி சென்றார்.

ஈழத்தில் இருந்த பெரும்பாலான விடுதலை இயக்கங்கள் தங்கள் இயக்க செலவுகளுக்காக பணம் கொள்ளையடித்தார்கள். சில இயக்கங்கள் வங்கியில் கொள்ளையடித்தன. சில பெற்றோல் நிலையங்கள், தபாற் கந்தோர்கள், சங்கக்கடைகள் என்பனவற்றில் கொள்ளையடித்தன. இன்னும் சில தனியார் வீடுகளிலும் மட்டுமல்ல கோயில்களிலும் கொள்ளையடித்தன.

ஈழவிடுதலை இயக்கங்கள் கொள்ளையடித்து பணத்தேவைகளை பூர்த்தி செய்ததை அறிந்த தோழர் தமிழரசனும் தமது அமைப்பு செலவுகளுக்காக பணம் கொள்ளையடிக்க முயன்றார். அவர் முதலில் முயற்சி செய்தது உட்கோட்டை வங்கியில் ஆகும். அங்கு கொள்ளையிட முயன்றபோது அந்த வங்கிக் காசாளர் பணத்தை கொடுக்க மறுத்தார். பணப்பையை எடுக்க இழுபறி நடந்தது. அதனால் அந்த காசாளர் சுடப்பட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு மக்கள் கூடிவிட்டார்கள். இதனால் பணம் கொள்ளையடிக்க முடியாமல் தமிழரசன் தன் குழுவினருடன் தப்பி சென்றார்.

இதன் பின்பு தமிழரசன் பணம் கொள்ளையடிக்க முயலவில்லை. அந்த எண்ணத்தை முற்றிலுமாக கைவிட்டிருந்தார். இந்த நிலையில் ஈழவிடுதலை இயக்கம் ஒன்றிற்கு இந்திய உளவுப்படை புலிகளை அழிக்குமாறு ஒரு தொகையான ஆயுதங்களை கொடுத்திருந்தது. அந்த ஆயுதங்களுக்கு பொறுப்பாக இருந்த 6 போராளிகள் தலைமையுடன் விரக்தி அடைந்திருந்தார்கள். எனவே அவர்கள் அந்த ஆயுதங்களை இரகசியமாக எம்மிடம் ஒப்படைக்க விரும்பினார்கள்.

எமது இயக்கம் அப்போது நாட்டில் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தது. எனவே ஆயுதங்களைப் பெற்றாலும் அவற்றை நாட்டுக்கு கொண்டுபோக முடியாத நிலை இருந்தமையால் நாம் அவ் ஆயுதங்களை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் இந்த விடயத்தை அறிந்துகொண்ட தோழர் தமிழரசன் அவ் ஆயுதங்களை தாம் பெற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால் ஆயுதங்களுக்கு பொறுப்பாக இருந்த போராளிகள் தமிழரசனுக்கு கொடுக்க விரும்பினாலும் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டார்கள். இதனால் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு அவர்களை ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு செல்ல உதவுவதாக தமிழரசன் வாக்குறுதியளித்தார்.

தோழர் தமிழரசன் இந்த விடயத்தை தன்னுடன் உறவு வைத்திருந்த பெருஞ்சித்திரனார் போன்ற தலைவர்களுடன் கலந்தாலோசித்தார். எல்லோரும் “ஆயுதங்களைப் பெற்று போராட்டத்தை ஆரம்பியுங்கள். நாங்கள் ஆதரவாக அரசியல் பிரச்சாரம் செய்கிறோம்” என உறுதியளித்திருந்தனர்.

இதனாலேயே மிகுந்த நம்பிக்கையுடன் பணம் கொள்ளையடிக்க தோழர் தமிழரசன் மீண்டும் முயற்சி செய்தார். ஆனால் அவர் கொண்டிருந்த அதீத நம்பிக்கையும் விட்ட சில தவறுகளும் அவரை மரணத்தில் தள்ளிவிட்டன. எதிரி மிகவும் நன்கு திட்டமிட்டு அவரை கொலை செய்துவிட்டான். ஒரு மாபெரும் போராளியை தமிழ்நாடு இழந்துவிட்டது.


தோழர் தமிழரசனால் தகர்க்கப்பட்ட அரியலூர் மருதையாற்று பாலம்

இந்திய அரசு ஈழப் போராட்டத்தை நசுக்குவதை தோழர் தமிழரசன் அன்றே உணர்ந்து கொண்டார். எனவே தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி 1986ல் அரியலூரில் மருதையாற்றுப் பாலத்தில் வெடிகுண்டு வைத்து தகர்த்தார். “மத்திய மாநில அரசுகளே தமிழீழத்தை அங்கீகரி!” என்ற பிரசுரங்களை தமிழ்நாடு விடுதலைப்படை என்னும் பெயரால் முன்வைத்தார். இது முழு இந்தியாவிலும் எதிரொலித்து. தோழர் தமிழரசனின் தீர்க்கதரிசமான இந்த கோரிக்கை சரியானது என்பதை இந்திய அரசே தமிழ் மக்களின் அழிவிற்கு காரணம் என்ற செய்தி நிரூபிக்கின்றது.

இச் சம்பவத்தில் திருச்சி நோக்கி வந்த மலைக் கோட்டை எகஸ்;பிரஸ் ரயில் கவிழ்ந்து ஏ.சி கம்பாட்மென்டில் இருந்த 35 பயணிகள் மரமணமடைந்ததால் இது முழு இந்தியாவிலும் பர பரப்பான செய்தியானது.

உண்மையில் அன்று நடந்தது என்னவென்றால் தோழர் தமிழரசன் தலைமையில் சென்ற தமிழ்நாடு விடுதலைப் படையினர் மருதையாற்று பாலத்தை குண்டுவைத்து தகர்த்துவிட்டு தமது கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்களை அருகில் ஒட்டியிருந்தனர். பின்னர் அருகில் இருந்த ரயில் நிலையம் சென்று தாம் குண்டு வைத்து பாலத்தை தகர்த்து விட்டதையும் எனவே ரயில் சேவையை நிறுத்தும்படி எச்சரித்துவிட்டு சென்றனர்.

அந்த ரயில் நிலைய பொறுப்பதிகாரி உடனே சென்னை உட்பட பல தலைமையிடங்களுக்கு இந்த செய்தியை அனுப்பினார். ஆனால் பல தொலை பேசி உரையாடல்களுக்கு பின்னர் ரயிலை மறிக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கும்படியும் மேலிட உத்தரவு வந்தது. இது அந்த அதிகாரிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருந்தும் மேலதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க வேறு வழியின்றி அடுத்து வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து செல்ல அனுமதித்தார். ஆனால் நிகழ இருக்கும் ஆபத்தை உணர்ந்தவராய் மனம் கேட்காமல் அந்த ரயில் டிரைவரிடம் “ஏதோ வெடி சத்தம் கேட்டது. மெதுவாக பார்த்து போகவும்” என்று எச்சரித்துள்ளார். சாரதியும் மெதுவாக ஓட்டி வந்ததால் ரயில் பாலத்தில் கவிழ்ந்து 35 பேர் பலியானார்கள். இல்லையேல் அதிகளவில் பலியாகியிருப்பர்.

பாலத்தில் குண்டு வெடித்து மூன்று மணி நெரம் கழத்து வந்த ரயில் கவிழ்து 35 பெர் பலியானார்கள். ஆனால் அடுத்தநாள் பத்திரிகைகளில் “ஓடும் ரயிலுக்கு குண்டுவைப்பு. பல அப்பாவி தமிழர்கள் பலி” என்று செய்தி வெளிவந்தது. மக்களுக்காக போராடியவர்கள் மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டனர்.

தாங்கள் எச்சரித்தும் தங்கள் மீது கெட்ட பெயர் உருவாக்குவதற்காக அரசு வேண்டுமென்றே ரயிலை கவிழ்த்து மக்களைப் பலியாக்கியள்ளது என்பதை தோழர் தமிழரசன் உணர்ந்து கொண்டார். இந்த உண்மையை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் அவர் இறக்கும் வரை மட்டுமல்ல அவர் இறந்தபின்பும் கூட இந்த உண்மை மக்கள் மத்தியில் வெளிவரவில்லை.

எந்த மக்களுக்காக தோழர் தமிழரசன் போராடினாரோ அந்த மக்களை குண்டு வைத்து கொன்றார் என்ற அவப் பெயருடனே அவர் மறைந்தார். ஆனால் மக்கள் என்றாவது ஒரு நாள் உண்மையை அறிந்து கொள்வார்கள் என நான் உறுதியாக நம்பகிறேன். அன்று தோழர் தமிழரசன் மீது படர்ந்த அவப் பெயர் நீங்கும். அவர் மக்களின் போராளி என்பது வெளிப்பட்டு மக்கள் மனங்களில் நிறைந்து காணப்படுவார்.

மீண்டும் குண்டுகள் வெடிக்கும்.
எதிரி தூக்கியெறிப்படுவான்.
தோழர் தமிழரசன் கனவுகள் நிறைவேறும்.


இன்று தோழர் தமிழரசன் குறித்து பலரும் வெளிப்படையாக ஆதரித்து பேசியும் எழுதியும் வருகின்றனர். 26 வருடங்களின் பின்னர் தமிழகத்தின் பல பாகங்களில் தோழர் தமிழரசன் நினைவு தினம் கொண்டாடப்படுவது உண்மையிலே மிக்க மகிழ்வு தருகிறது. ஆனால் அன்று அப்படி நிலை இருக்க வில்லை. தமிழரசனின் போராட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள்கூட வெளிப்படையாக ஆதரிக்க தயங்கினார்கள். அந்தளவுக்கு கியூ பிராஞ் பொலிசின் அடக்கு முறைகளும் நெருக்கடிகளும் இருந்தன.

தோழர் தமிழரசனின் நெருங்கிய ஆதரவாளர்கள் அவரை காட்டிக் கொடக்கும்படி நெருக்கப்பட்டார்கள். தோழர் தமிழரசன் அடிக்கடி செல்லும் ஒரு ஆதரவாளரை இனங் கண்டு கொண்ட உளவுப்படை பொலிசார் அவரிடம் நஞ்சைக் கொடுத்து அதை சாப்பாட்டில் கலந்து கொடுக்கும்படி வற்புறுத்தினார்கள். இல்லையேல் அவருடைய குடும்பத்தை சின்னா பின்னமாக்குவோம், மனைவியை விபச்சார வழக்கில் கைது செய்வோம், மகளை மான பங்பப்படுத்துவோம் என்றெல்லாம் மிரட்டியிருந்தனர். அந்த ஆதரவாளரும் பயந்து வேறு வழியின்றி சம்மதித்தார்.

வழக்கம்போல் ஒரு நாள் தோழர் தமிழரசன் அந்த ஆதரவாளர் வீட்டுக்கு வருகை தந்தபோது அந்த ஆதரவாளர் சாப்பாட்டில் நஞ்சைக் கலந்து கொடுத்திருக்கிறார். கொடுக்கும்பொது அவரது மனட்சாட்சி உறுத்தியதால் கைகள் நடுங்கியிருக்கிறது. இதை அவதானித்த தோழர் தமிழரசன் ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு தனக்கு பசிக்க வில்லை என்று கூறிவிட்டு சாப்பிடாமல் சென்றுவிட்டார்.

அதேபோல் இன்னொரு முறை வேறொரு ஆதரவாளர் வீட்டுக்கு தமிழரசன் சென்றபோது அவரது வருகை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழரசன் தனி ஆள் தானே . இலகுவாக கைது செயயலாம் என்று நினைத்து ஒரு சப் இன்பெக்டரும் நாலு காவலரும் ஜீப் வண்டியில் சென்றுள்ளனர். இரவு நேரம். தமிழரசன் வெளியில் வரட்டும் கைது செய்யலாம் என நினைத்து வீதியோரத்தில் பதுங்கியிருந்தனர். வெளியே வந்த தமிழரசன் தனது மோட்டார் வண்டியில் ஏறு முன்னர் வழக்கம்போல் தனது சப் மிசின்கன் துப்பாக்கியை சரிபார்த்திருக்கிறார்.

அவர் எப்போது பணயம் செய்யும் போது துப்பாக்கியை சரி பார்ப்பது வழக்கம். (லோட் செய்து லாக்கில் தயார் நிலையில் வைத்திருப்பார்). அவர் சப் மிசின்கன் துப்பாக்கி வைத்திருப்பதை பார்த்து திடுக்கிட்ட பொலிசார் பயந்து அவரை கைது செய்ய முயற்சிக்காமல் அப்படியே பதுங்கி இருந்துவிட்டனர். எனெனில் அவர்களிடம் ஒரேயொரு துப்பாக்கி அதுவும் 303 ரைபிள் துப்பாக்கியே அப்போது இருந்திருக்கிறது. அடுத்தநாள் தகவல் கொடுத்தவரை “ஏன்டா, அவன் மிசின்கன் வைத்திருப்பதை எங்களுக்கு முன்னரே சொல்லவில்லை. நல்ல காலம். நேற்று எங்களை கொல்லப் பார்த்தியே” என்று செல்லி அடித்தார்களாம்.

சந்தன வீரப்பன் போல் காட்டில் இருந்தால்தான் பொலிசில் இருந்து தப்பிக்க முடியும் என சிலர் என்னிடம் கூறுவதுண்டு. ஆனால் மக்கள் ஆதரவு இருந்தால் மக்கள் மத்தியிலேயே இருக்க முடியும் என்பதற்கு தோழர் தமிழரசன் ஒரு நல்ல உதாரணமாக நான் காட்டுவேன். அவர் மோட்டார் சயிக்கிளில் எப்போதும் துப்பாக்கியுடன் செல்வார். அதற்கு லைசென்ஸ் கிடையாது. அது அவருடைய வண்டியும் கிடையாது. ஒரு பண்ணையாரிடம் பறித்தெடுத்தது. இருந்தும் அவர் இறக்கும்வரை பொலிசில் பிடிபட்டது கிடையாது.


தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள் !

செங்கொடி பதிகிறது!
செவ்வணக்கம் செலுத்துகிறது!

தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!

சோசலிச அமைப்பு இறுதியில் முதலாளித்துவ அமைப்பை பலியாக்கும். இது மனித சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு புறநிலை விதி. பிற்போக்குவாதிகள் வரலாற்றுச் சக்கரத்தை தடுத்து நிறுத்த எவ்வளவுதான் முயன்றாலும் இன்றோ, நாளையோ புரட்சி தோன்றுவது நிச்சயம். அது வெற்றிவாகை சூடுவதும் தவிர்க்க முடியாது- தோழர் மாஓ சேதுங்

தோழர் தமிழரசனைக் கொல்வதன் மூலம் தமிழ்நாடு விடுதலைப் படையை நசுக்கலாம். அதன் மூலம் தமிழ்நாடு விடுதலையை தடுக்கலாம் என இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் திட்டம்போட்டு சதி மூலம் தோழர் தமிழரசனையும் அவரது தோழர்கள் 4 பேரையும் 1987ம் ஆண்டு பொன்பரப்பியில் கொன்றனர். ஆனால் அவர்கள் கனவு பலிக்கவில்லை.

படுகொலை செய்யப்பட்ட தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டுள்ளார். அவரில் இருந்து பல தமிழரசன்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். வெகுவிரைவில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழும். அது தோழர் மாஓசேதுங் கூறியதுபோல் வெற்றிவாகை சூடுவது தவிர்க்க முடியாதது.

தோழர் தமிழரசன் அவர்கள் பாதையில் தொடர்ந்து செல்வதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். அவரை என்றும் நினைவில் கொள்வோம்.


1-9-1987 தோழர் தமிழரசன் உளவுத்துறையின் கைகூலிகளால்
காட்டிக்கொடுக்கப்பட்டு, கொல்லப்பட்ட தினம்.!

தலித் தலைமை தமிழகத்தை ஆளவேண்டுமென்று முழங்கிய மாபெரும் போராளி இவர். அரசியல் சந்தர்ப்பவாதங்களுடன் சமரசம் ஆகாதவர். இவருக்கு வண்ணிய சாயம் பூச முயலும் சாதியவாதிகளுக்கு இவர் பெருமைகள் தெரியுமா.?

மக்கள் யுத்தக்குழுவில் இருந்த புலவர் கலியபெருமாள், தமிழரசன் ஆகியோர்களிடம், தனித் தமிழ்நாடு கோரிக்கைகள் வலுபெற்றதை அடுத்து மக்கள் யுத்தக்குழு இவர்களை வெளியேற்றுகிறது. B.E வேதியல் படித்தவர் தமிழரசன். வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுனர். பிரமிக்கத்தக்க வரலாற்று அறிவுபெற்றவர். மீன்சுருட்டி தீர்மாணங்கள் எனும் நூலை படிப்பவர்கள், அந்த ஆயுதப்போராளியின் அரசியல் அறிவை அறியலாம். இருப்பவனிடம் பறித்து இல்லாதவனுக்கு வழங்கும் நக்சல்களின் பிரத்யோக பொருள் திரட்டுதல் முறைப்படி, பொருள் சேர்ப்பதற்காக தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறார். 1-9-1987 அன்று, பொன்பரப்பியில் இருந்த ஸ்டேட் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வெளியேறும் பொழுது அவர் மக்களால் சுற்றி வளைக்கப்படுகிறார். மக்களோடு மக்களாக காவலர்களும் சாதாரன உடையில் நிற்க, தற்காப்பு நடவடிக்கைக்காக ஆயுதத்தை உபயோகிக்கமுடியாமல் தோழர் தவிக்கிறார். ஆயுத பிரயோகம் மக்களுக்கு எதிரானதாக மாறிவிடுமோ என அவர் அஞ்சி நிற்க, அவர் “தோழர் தமிழரசன்” தான் என்று தெரியாமல் ஊர் மக்கள் அவரை தாக்கினர். அப்பொழுது அவரிடம் குண்டுகளுடன் துப்பாக்கி இருந்தது. எச்சரிக்கும் விதமாக துப்பாக்கியை உபயோகித்திருந்தால், மக்கள் ஓட்டம்பிடித்திருப்பர். குறைந்தபட்சம் அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுடப்போவதாக நீட்டியிருந்தால் கூட மக்கள் நெருங்கியிருக்கமாட்டார்கள். ஆனால் தன் மக்களை மிகவும் நேசித்த தோழர் அவர்களை சுடப்போவதாக கூட சொல்வில்லை. எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களின் கையில் அடிபட்டு இறந்தார். தோழர் தமிழரசனுடன், தர்மலிங்கம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் என தமிழ்நாடு விடுதலை படையின் ஐந்து தலைமைக்குழு உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இதை விட ஒரு சோகமான செய்தி, பொன்பரப்பி தமிழரசனின் சொந்த கிராமம். தன்னை வெளிப்படுத்தினால் எங்கே தன்னை ஒரு கொள்ளையனாக தன் ஊர் மக்கள் நினைத்து விடுவார்களோ என்று எண்ணி தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமலே தோழர் மறைந்து போனார். தங்களால்

கொல்லப்பட்டது தமிழரசன் என்று பிறகு கேள்விபட்டவுடன் மக்கள் கதறினர். பொன்பரப்பிலும், பிற கிராமங்களிலும் சோகம் சூழ்ந்தது.

தோழர் தமிழரசனின் வாழ்க்கைமுறை மிகச்சிறந்த போராளிக்கான உன்னத வாழ்க்கை முறை. (அடிமைத்தனத்துக்கு எதிரானவன்தானே போராளியாக இருக்கமுடியும்.?) அவர் ஒரு தலித் என்று கணிக்கக்கூடிய அளவிலேயே அவரது நடவடிக்கைகள் அமைந்தது. அதாவது சேரிகளிலேயே உண்பது, உறங்குவது, பழகுவது என அவரது வாழ்க்கை பெரும்பாலும் தலித்துகளுடனேயே கழிந்தது.

தமிழரசனை பிரசவித்த வண்ணிய சாதியை, வெறும் தலித் எதிர்ப்பாளர்கள் என்ற அளவில் மட்டுமே அவர்கள் அறிவை மழுங்கடித்து வைத்திருக்கக்கூடிய இன்றைய அரசியல் எவ்வளவு மோசமானது.?

தமிழரசன் கொல்லப்படாதிருந்தால் அத்தகைய சுயநல சக்திகள் கிளம்பியிருக்கமுடியாது. மேலும் தமிழ்தேசியம் என்றாலே, திராவிட எதிர்ப்பு என்று மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுபோடும் அரைகுறைகளுக்கும் வேலையிருந்திருக்காது. தமிழரசன் மார்க்சையும், அம்பேத்கரையும், பெரியாரையும் முன்னிறுத்தியே சமத்துவம் பேசினார். சாதிஒழிப்பை வலியுறுத்தியே தமிழ்தேசியமும் பேசினார்.

** சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்”

என்ற

மீன்சுருட்டி மாநாட்டின் அறிக்கையில் அவரது சிறப்பு மிகு பதிவுகள்,

*பிற்போக்கு வாதிகளின் மதவெறி, சாதிவெறி, பிரித்தொதுக்கும் முயற்சிகளை முறியடிப்போம்.

*உழைக்கும் மக்களைச் சாதி ஒழிப்பின்அடிப்படையில் ஒன்றுபடுத்துவோம்.

*வறட்டுவாதிகளின் சீர்திருத்தவாதிகளின் தவறான அணுகுமுறைகளை முறியடித்து சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

*தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா!

*தாழ்த்தப்பட்டவர்களின் சிறைக்கூடமே சேரிகள்! #

இதுவல்லவா தமிழ்தேசியம்.?

தும்பைவிட்டு வாலைபிடிக்கும் இன்றைய சந்தர்பவாத சாதித் தமிழ்தேசியவாதிகளெ, தமிழரசனின் தமிழ்தேசியத்தை படியுங்கள்.. தமிழரசனின் சாதிஒழிப்பு சித்தாந்தத்தை படியுங்கள். பிறகு நீங்கள் தனித் தமிழகத்துக்காக போராடலாம், ஈழத்துக்கு குரல் கொடுக்கலாம், உலகின் எங்குமுள்ள அடக்குமுறைக்கு எதிராகவும் போராடலாம்.


மாவீரர் தமிழரசனுக்கு வீரவணக்கங்கள்.!!

• மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்!
-தோழர் மாவோ சேதுங்

1984ல் மலையாளப்பட்டியில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்தார். அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் சில தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார். அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அழைத்து சென்றார்.

உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் குளத்தில் குளிக்கலாம் என்று தமிழரசன் கூறினார். இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள். மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஒடியவர்கள் குளிக்காமல் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவினார்.

எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் இருக்கவே செய்தது.

அந்த குளம் குட்டையாகவே இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினர். இதைப் பரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று மாவோ கூறினார் “ என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார். மாவோ வின் வரிகளைக் கேட்தும் அதன் அர்த்தத்தைப் பரிந்து கொண்ட எமது தோழர்கள் “புரட்சி ஓங்குக” என்று உரத்து கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர்.

பின்பு சாப்பிடுவதற்காக அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது. எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை. இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார். தோழர்கள் புரிந்து கொண்டனர். இம்முறை தோழர்களே மாவோ வின் வரிகளை உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள்.

என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கியவர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள். உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள்.

இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள். அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார்.

தோழர் தமிழரசனோடு 1985 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நெருங்கி பழகிய தோழர் பாலன் அவர்களின் நினைவுக் குறிப்புகளில் இருந்து.. அவர் அனுமதி பெறாத போதும் வரலாற்றின் உண்மைகள் பதியப் பட வேண்டும் என்பதனால் தொகுத்திருக்கின்றேன். நன்றி பாலன் தோழர்.

“பெரம்பலூருக்கு அருகில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் எமது பாசறை இருந்தது. அதை அமைத்து அதில் எம்முடன் தங்கியிருந்து அரசியல் வகுப்பு எடுத்தவர் தோழர் தமிழரசன். அவருடன் அரியலூர, ஜெயங்கொண்டம், பெண்ணாடம், பொன்பரப்பி போன்ற கிராமங்களுக்கு சென்று அடித்தட்டு மக்களை சந்தித்தது மறக்க முடியாதது.”

“இது நடந்தது 1983க்கு பின்பு. அப்போது எல்லா அமைப்புகளுமே தமிழ்நாட்டில் பாசறைகள் வைத்திருந்தன. ஆனால் தனித்தனியாகவே வைத்திருந்தன. எமக்கு மலையாளப்பட்டியில் அரசியல் வகுப்பு பாசறையும் வாடிப்பட்டியில் ராணுவ பயிற்சி பாசறையும் இருந்தது. இதில் வாடிப்பட்டியில் தோழர் தமிழரசனும் அவரது தோழர்களும் பயிற்சி பெற்றனர்.”

“அன்றைய காலப்பகுதியில் பெரும்பாலான அமைப்புகள் இந்திய அரசை நம்பின. எனவே அவை இந்திய அரசுக்கு எதிராக தமிழரசன் போன்ற புரட்சியாளர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை.”

“இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் காண வேண்டும். இலங்கை ராணுவத்திற்கு எதிராக எம்முடன் சேர்ந்து தாக்குதல் நடத்த வேண்டும் என்று தோழர் தமிழரசன் மிகவும் விரும்பினார். அதற்காக இரண்டு முறை வேதாரணியம் கடற்கரை வரை வந்திருந்தார். ஆனால் துரதிருஸ்டவசமாக அவரது ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை. அவர் இலங்கை வந்திருந்தால் எமது பொராட்ட வரலாறு வேறு விதமாக அமைந்திருக்குமோ என நான் பலமுறை நினைத்ததுண்டு.”

“தர்மபுரியில் நக்சல்பாரிகளை ஒழிப்பதாக கூறி பல தாழ்த்ப்பட்ட மக்களை கொன்றவன் தேவாரம் என்ற பொலிஸ் அதிகாரி. அவனை கொன்று பழி தீர்க்க வேண்டும் என தோழர் தமிழரசன் விரும்பினார். விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பெண் வீட்டிற்கு தேவாரம் அடிக்கடி இரவில் தனியாக வருவதை அறிந்த தோழர் தமிழரசன் அவனைக் கொல்வதற்காக இரண்டு முறை வந்து காத்து நின்றார். ஆனால் அந்த இரண்டு முறையும் அவன் வராமல் தப்பி விட்டான். அவனைக் கொல்ல வில்லை என்ற வருத்தம் தோழருக்கு இறுதிவரை இருந்தது.”

“தோழர் தமிழரசன் மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படைக்கு பயிற்சி மற்றும் ஆயுத உதவிகள் செய்தமைக்காக எமது தோழர் நெப்போலியன் அவர்கள் இந்திய உளவுப் படையின் வேண்டுகொளுக்கு அமைய அதன் கைக்கூலிகளால் மலையகத்தில் வைத்து நயவஞ்சகமாக கொல்லப்பட்டார். மலைய மக்கள் விடுதலை முன்னியை ஆரம்பித்தவர் தோழர் நெப்போலியன். அதன் வளர்ச்சிக்காகவே பணப் பறிப்பு செய்தார். பின்பு அதனை வைத்து சந்திரசேகரன் அமைச்சராகிவிட்டார். ஆனால் நெப்பொலியன் கொள்ளையர் பட்டம் சுமக்கிறார்.”

“தமிழரசன் கொல்லப்பட்டபோது அவரிடமிருந்த இரண்டு சப் மிசின்கன்களும் 4 கிரினைட் வெடி குண்டுகளும் பற்றி இந்திய உளவுப்படை மூச்சு விடுவதில்லை. ஏனெனில் இவை அவர்களால் ஈழவிடுதலை இயக்கம் ஒன்றிற்கு வழங்கப்பட்டவை. அவை எம் மூலம் தோழர் தமிழரசனுக்கு சென்றதை அறிந்ததும் எம்மை அழிக்க துடித்தன.”

“தோழர் தமிழரசனுக்கு அவரது தாயாரின் நிலத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க தோழர் புலவர் கலியபெருமாள் முயற்சி செய்தார். அவர் மரணமடைந்துவிட்டதால் அவரது முயற்சியை தோழர் பொழிலன் தொடர்ந்தார். அவரும் கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கில் சிறை வைக்கப்ட்டிருப்தால் அவராலும் அதை நிறைவேற்ற முடியவில்லை. தோழர் முகிலன் திண்டிவனத்தில் அமைத்த மண்டபத்திற்கு தோழர் தமிழரசன் மணி மண்டபம் என பெயர் வைத்திருக்கிறார்.”

“தோழர் தமிழரசன் கொல்லப்பட்டபோது ஜயா பெருஞ்சித்திரனார் தவிர வேறு யாருமே பகிரங்கமாக அஞ்சலி செலுத்தவில்லை. அந்தளவுக்கு பொலிஸ் நெருக்கடி இருந்தது. ஆனால் இன்று பலர் பகிரங்கமாக தோழர் தமிழரசன் குறித்து பேசுகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பெண்ணாடத்தில் நடந்த புலவர் இரங்கல் கூட்டத்தில் தோழர் தமிழரசன் குறித்து நீண்ட ஒரு புகழ் உரை வழங்கினார். (அதன் வீடியோ விரைவில் இங்கு இணைக்க இருக்கிறேன்) இது இனிவரும் காலம் தோழர் தமிழரசன் காலம் என்பதையே காட்டுகிறது.”

“நாம் இரண்டு தவறுகள் செய்திருக்கிறோம். ஒன்று தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை எமது போராட்டத்தில் இணைத்திருக்க வேண்டும். இரண்டாவது தமிழ்நாட்டில் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு உதவியிருக்க வேண்டும். இந்த இரண்டும் நடந்திருந்தால் நிச்சயம் முள்ளிவாய்க்கால் அழிவு நடந்திருக்காது. இதற்காக நாமும் தோழர் தமிழரசுனும் முயற்சி செய்தோம். ஆனால் எமது முயற்சி வெற்றி பெறவில்லை. எதிரி இனங்கண்டு அழித்துவிட்டான்.”

“தோழர் பொழிலன் அவர்கள் பெருஞ்சித்திரனாரின் மகன். தோழர் தமிழரசன் மறைவிற்கு பின்பு தமிழ்நாடு விடுதலைப் படையை முன்னெடுக்க நான் தான் அவரை தயார்படுத்தினேன். அதனால் தான் கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கில் நான் சேர்க்கப்பட்டேன். நான் சிறையில் இருந்தபோது “ உழைக்கும் மக்கள் தமிழகம்” சஞ்சிகை எனக்கு அனுப்பிவைப்பார். நான் லண்டன் வந்தபின்பு அனுப்பி வைத்திருக்கிறார்.

“தோழர் தமிழரசன் பற்றி மட்டும்மல்ல அவரது தலைவர் புலவர் கலியபெருமாள் இன்னும் தோழர்கள் லெனின் , மாறன் ஆகியோர் பற்றியெல்லாம் எல்லாம் என் அனுபவங்களை நிச்சயம் எழுதுவேன். தற்போது நான் என் எட்டுவருட சிறை அனுபவங்களை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். இது முடிந்ததும் தொடர்வேன்.”

“அடுத்த போராட்டம் அனைத்து தமிழ் மக்களும் இணைந்து உலகின் அனைத்து பாகங்களிலும் முன்னெடுப்பார்கள். இது உறுதி. தமிழ்மக்களின் போராட்டம் உலகமயமாகிவிட்டது. இனி எமது எதிரிகள் முன்னர் போல் அவ்வளவு இலகுவாக எம்மை அழிக்க முடியாது.”

“பெரம்பலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு தோழர் தமிழரசன் தொடர்பாக சில தகவல்கள் பெற்றார். அவர் எழுதிக் கொண்டிருக்கும் தோழர் தமிழரசன் பற்றிய புத்தகம் விரைவில் வெளிவரும் என நம்புகிறேன்”

தோழர் தமிழரசனுடன் இறுதிக்காலங்களில்(1983 முதல் அவர் இறக்கும்வரை); நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் அவரது பல முக்கிய விடயங்கள் எனக்கு தெரியும். தற்போது நான் மட்டுமே உயிருடன் இருக்கிறேன். எனவே இவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துவது என் முக்கிய கடமையாகும். அதை நான் உணர்ந்திருப்பதோடு நிச்சயம் நிறைவேற்றுவேன்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: