தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 62 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!

தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 62 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!

தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 62 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!

தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 62வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து போன மாநிலங்கள் இதைக் கொண்டாடி வருகின்றன.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், மொழி வழியில் மாநிலங்களைப் பிரிப்பதற்கான கோரிக்கை வலுவாக எழுந்தது.

இதையடுத்து, 1956-ல் நவம்பர் 1-ஆம் தேதியன்று இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

மலையாளம் பேசும் மக்களும், கன்னடம் பேசும் மக்களும் தங்களுக்கென ஒரு மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் ஒன்றாம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

கேரளாவில் இந்த தினம், கேரள பிறவி தினம் என்றும், கர்நாடகத்தில் இந்த நாள் கன்னட ராஜ்யோத்ஸவம் என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அன்றைய மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு பல நிலப் பகுதிகள் அளிக்கப்பட்டதால் பொதுவாகவே இந்த தினம் குறித்த உற்சாகம் தமிழகத்தில் காணப்படுவதில்லை. மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டாலும் மெட்ராஸ் ஸ்டேட் என்றுதான் பெயர் இருந்தது.

ஆனால், மொழி அடிப்படையில் தமிழ்நாடு பிரிக்கப்பட்ட பிறகுதான், மாநிலத்தில் வளர்ச்சியில் ஒரு உத்வேகம் ஏற்பட்டது. ஒரு நிலப்பகுதி மொழி வழியாக பிரித்து, ஆளப்படும்போதுதான் அதற்கென ஒரு சமூக கூட்டு உணர்வு வருகிறது. மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பெரும் வளர்ச்சி பெற்றிருப்பதையும் பிராந்திய அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள வட இந்திய மாநிலங்கள் அந்த அளவு வளர்ச்சியின்றி இருப்பதும் ஒரு உதாரணம்.

ஆனால், மொழி வழியாக மாநிலங்கள் பிரிந்ததால் மட்டுமே வளர்ச்சி வந்துவிடுமா என்ற விவாதங்களும் நீடிக்கவே செய்கின்றன. எதிர்பார்த்த வளர்ச்சி இல்லையென்றால், மாநிலங்களின் அதிகாரம் தொடர்ந்து மத்திய அரசால் மையப்படுத்தப்பட்டு வருவதே காரணம்.

இருந்தபோதும், தங்களுடைய மொழி, கலாச்சாரம், பிராந்தியம் வளர வேண்டும் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் தற்போது குறுகிய நோக்கம் கொண்ட அரசியல் தலைவர்களால் திரிக்கப்பட்டு இனவெறியாக மாற்றப்படுவதும் வேதனையான ஒன்று.

மொழிவழியாக மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால், தமிழகம் தற்போது சந்திக்கும் எல்லைப் பிரச்சனைகள், நதி நீர் தாவாக்கள் போன்றவை ஏற்பட்டிருக்காது என்ற வாதம் வலுவானதல்ல என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். வேறுவிதமான பிரச்சனைகளை அவை உருவாக்கியிருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

இந்தியாவில் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, இந்த மாநிலங்களில் அடங்கியிருந்த பல்வேறு பகுதிகள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக போராடியதில் உத்தராகண்ட், தெலங்கானா என பிராந்திய அடிப்படையிலும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

தற்போதும் இந்தியாவில் பல தனி மாநிலக் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: