சங்க கால தமிழ் இலக்கிய நூல்கள்!

சங்க கால தமிழ் இலக்கிய நூல்கள்!

சங்க கால தமிழ் இலக்கிய நூல்கள்!

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப் பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் அறியத்தருகின்றன.


ஒன்றுபட்ட உலக. த் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி.வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும் பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

முதல் சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் முதலியன மொத்தமாக 9990 ஆண்டுகள் நிலபெற்றிருந்தன. இக்காலங்களில் 8598 புலவர்கள் அரிய பல நூல்களை இயற்றி சங்கத்தில் அரங்கேற்றியுள்ளனர். முதல் இரு சங்கங்களிலும் எண்ணிறந்த இலக்கிய நூல்கள் எழுந்தன என்வும், அவற்றுள் பெரும்பாலானவை அழிந்தொழிந்தன எனவும் தற்போது எஞ்சி நிற்கும் நூல்கள் பெரும்பாலும் கடைச்சங்கத்தை சார்ந்தவை என்று செவி வழிச் செய்திகள் வலியுறுத்துகின்றன.

கி.மு 500 முதல் கி.பி 900 வரயுள்ள காலகட்டங்களை கடைச்சங்க காலமென வரலாற்று அறிஞர்கள் குறிபிட்டுள்ளனர். சங்க நூல்களுள் இக்காலம் எஞ்சியிருப்பனவற்றில் தொல்காப்பியம் இடைச்சங்கத்திற்கு உரியது என்றும், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியன் கடைச்சங்க படைப்புகள் என்றும் அறியப்படுகிறன.

எட்டுத்தொகை நூல்கள் :

நற்றினை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு

பத்துப்பாட்டு நூல்கள் :

திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் :

திருக்குறள்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
களவழி நாற்பது
திரிகடுகம்
ஆசாரக்கோவை
பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்
முதுமொழிக்காஞ்சி
ஏலாதி
கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
கைந்நிலை
நாலடியார்

பெண் புலவர்கள் :

ஔவையார், அள்ளூர் நன்முல்லையார், காக்கைப் பாடினியார், நச்செள்ளையார், நக்கண்ணையார், வெள்ளி வீதியார், மாறோக்கத்து நப்பசபையார்,
வெண்ணிக்குயத்தியார், குறமகள் இளவெயினி, பூங்கணுத்திரையார், ஒக்கூர் மாசாத்தியார். அரச குல ஆதிமந்தி, பெருங்கோப்பெண்டு மற்றும்
பாரி மகளிர் அங்கவை, சங்கவை.

சோழர் கால இலக்கிய படைப்புகள் :

பட்டினைப்பாலை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களை இயற்றிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணார்க்கு கரிகால் சோழன் (கி.மு.60முதல் கி.மு.10 வரை) பதினாறு நூறாயிரம் பொன்னை பரிசாக அளித்தான். இதுவே புலவர்களுக்கு அளித்த மிக பெரிய பரிசாகும். கி.பி.898 ல் உத்தரபுராணம் குணபத்ரா என்பவரால் இயற்றப்பட்டது. கி.பி.10ம் நூற்றாண்டில் வளையாபதி, குண்டலகேசி படைக்கப்பட்டன. கல்லாடம் என்னும் நூலை கல்லாண்டார் படைத்துள்ளார்.

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் குலோத்துங்க சோழசரிதை என்னும் நூலை திருநாரயணப்பட்டர் படைத்துள்ளார். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கலிங்கத்துப் பரணி எனும் சிறந்த இலக்கியத்தை படைத்தார்.

விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் மற்றும் இரண்டாம் இராசராசன் காலத்தில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், குலோத்துங்கச் சோழனுலா, இராசராச சோழனுலா, சரசுவதி அந்தாதி, அரும்பைத் தொள்ளாயிரம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.

சோழப் பேரரசின் கால கம்பர் இராமாயணம் எனும் ஒப்பற்ற காவியத்தையும், சடகோபர் அந்தாதி, மும்மணிக்கோவை மற்றும் திருக்கை வழக்கம் முதலிய நூல்களை படைத்துள்ளார். நளவெண்பா புலவர் புகழேந்தி படைத்த சிறந்த இலக்கியமாகும்.

அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் பெரியபுராணம் சேக்கிழார் படைத்த சிறந்த இலக்கியமாகும். கருவூர்ப்புராணம் கருவூர்த்தேவரால் எழுதப்பட்டது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் முற்பகுதியில் மெய்கண்டர் சிவஞானபோதம், அருணந்தி சிவஞான சித்தியார் மற்றும் இருபாவிருபது எனும் நூல்களை படைத்தார்.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியுலும் பதின்னான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சைவ சித்தாந்தத்தின் தத்துவத்தை விளக்கும் வண்னம் எட்டு நூல்கள் உமாபதி சைவாச்சாரியார் என்பவரால் எழுதப்பட்டது.

புத்தரிமித்திரன் வீரசோழியம், தண்டியாசிரியரின் தண்டியலங்காரம், குணவீரர் எழுதிய நேமிநாதம், பவணந்தி முனிவரின் நன்னூல், மண்டல புருஷர் எழுதிய சூடாமணி நிகண்டு ஆகியவை குறிப்படத்தக்க மொழியியல் நூல்களாகும்.

சோழர் காலத்தில் வைணவ இலக்கியமும் தழைத்தது, முகை பிரான் என்பவர் நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்கவுரை எழுதினார்.
திருவரங்கத்து அமுதனார் என்பார் இராமானுஜர் நூற்றந்தாதி எனும் நூலைப் படைத்தார். மேலும் யமுனாச்சாரியார், யாதவப் பிரகாசர், இரரமானுஜர் போன்றோர் பல்வேறு இலக்கியங்களையும் படைத்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: