விருதுநகர், செங்குன்றாபுரத்தில் ஊரணி சீரமைப்பு பணியின்போது கிடைத்த ஐம்பொன் சிலைகள்!

விருதுநகர், செங்குன்றாபுரத்தில் ஊரணி சீரமைப்பு பணியின்போது கிடைத்த ஐம்பொன் சிலைகள்!

விருதுநகர், செங்குன்றாபுரத்தில் ஊரணி சீரமைப்பு பணியின்போது கிடைத்த ஐம்பொன் சிலைகள்!

விருதுநகர் மாவட்டம், செங்குன்றாபுரம் ஊரணி சீரமைப்பின்போது 70 ஆண்டுகளுக்கு முந்தைய ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


செங்குன்றாபுரம், அழகாச்சி ஊரணியில் மத்திய அரசின் ‘வேர்ல்டு விஷன் ஆப் இந்தியா’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடந்தன. இதில், கரையை தோண்டியபோது காமாட்சியம்மன், சிவலிங்கம், ஆறுமுகத்துடன் சுப்பிரமணியர், இரு முருகர் சிலைகள், காலிங்க நர்த்தன கிருஷ்ணர், ஐந்து தலை நாகம், கீழே மூன்று தலை சிவன் என ஆவுடை பீடத்தில் உள்ளது போன்ற ஐம்பொன் சிலைகள் கிடைத்தன.

இதுகுறித்து ஆமத்துார் காவல்துறை, விருதுநகர் தாசில்தார் செய்யது இப்ராஹிம், அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாளுக்கு தகவல் கொடுத்தனர். சிலைகளை ஆய்வு செய்த பின் காப்பாளர் கூறியதாவது: செம்பு அதிகம் கலந்த உலோக சிலைகளான இவை, ஐம்பொன்போல் உள்ளது. இந்த சிலைகள் 70 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: