சங்க கால மக்கள் வாழ்விடம் ரிஷிவந்தியம் பகுதியில் கண்டுபிடிப்பு!

சங்க கால மக்கள் வாழ்விடம் ரிஷிவந்தியத்தில் கண்டுபிடிப்பு!

சங்க கால மக்கள் வாழ்விடம் ரிஷிவந்தியத்தில் கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியில், சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாள பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தென்னக தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத் தலைவர், பிரியா கிருஷ்ணன், தொல்லியல் ஆர்வலர்கள், பழனிசாமி, கோவிந்தன், மாணவர் சுபாஷ் ஆகியோர், ரிஷிவந்தியம் பகுதியில் கள ஆய்வு நடத்தினர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அப்போது, சங்க காலம், பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய, அடையாளப் பொருட்களை கண்டு பிடித்தனர்.

இது குறித்து, பிரியா கிருஷ்ணன் கூறியதாவது: ரிஷிவந்தியம் விவசாயிகள், வயல்களை உழுதபோது, கறுப்பு மற்றும் சிவப்பு நிற மண்பானை ஓடுகளை கண்டெடுத்து, வரப்பு பகுதிகளில் குவித்திருந்தனர். அவை, சங்க காலத்தை சேர்ந்தவை.

அவற்றை ஆய்வு செய்தபோது, இரண்டு ஓடுகளில், மேல்நோக்கிய இரண்டு அம்புக்குறிகள் இருப்பதை கண்டறிந்தோம். இந்த குறிகள், வெவ்வேறு இனக்குழுக்கள் கலந்ததற்கான அடையாளமாக இருக்கலாம்.

மேலும், அப்பகுதியில், இரும்பு உருக்கு ஆலைக்கு பயன்படுத்தும், ஊது குழலும் கிடைத்தது. அந்த மக்கள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிந்திருந்தனர் என்பதை காட்டுகிறது. ரிஷிவந்தியம், பாசார் பகுதியில், பெருங்கற்கால மக்களுக்கான, எட்டு கல்வட்டங்கள் இருந்ததையும் கண்டுபிடித்தோம்.

அங்கு, முதுமக்கள் தாழிகள் வைக்கப்பட்ட ஈமக்காட்டையும், அதன் எதிரில், இறந்தோரைப் புதைத்து, அதைச் சுற்றி, சிறிதும், பெரிதுமான எட்டு கல்வட்டங்கள் இருந்ததையும் கண்டுபிடித்தோம்.

வரலாற்று சிறப்புமிக்க இப்பகுதிகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, இப்பகுதியில் ஆய்வு செய்ய, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  • தினமலர்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: