எளிய நடையில் தமிழை புகட்டிய தமிழறிஞர் மா.நன்னன், தமிழை விட்டு பிரிந்தார்!

எளிய நடையில் தமிழை புகட்டிய தமிழறிஞர் மா.நன்னன், தமிழை விட்டு பிரிந்தார்!

எளிய நடையில் தமிழை புகட்டிய தமிழறிஞர் மா.நன்னன், தமிழை விட்டு பிரிந்தார்!

திராவிட இயக்கத்தில் பற்றுக்கொண்ட தமிழறிவை எளியவருக்கும் புகட்டிய தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரான மா.நன்னன் அவர்களின் இறப்பு தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். மா.நன்னன் அவர்கள் ஆரம்ப காலத்தில் ஆசிரியராக தனது பணியை தொடங்கியிருந்தாலும் படிப்படியாக உயர்ந்து தமிழின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் பணியாற்றி இருக்கிறார். தமிழில் எண்ணற்ற நூல்களை எழுதியது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமிழை கற்பித்தது அளப்பரியது. மா.நன்னன் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், மற்றும் உறவினர்களுக்கும் உலகத் தமிழர் பேரவை -யின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


மா. நன்னன் அவர்களின் வாழ்க்கை வரலாறு :

மா. நன்னன் (30 சூலை 1924 – 07 நவம்பர் 2017)

இளமையும் வாழ்வும்

இவர் விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் எனும் ஊரில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணி புரிந்தார். மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11.02.1980 முதல் 31.05.1983 வரை பணியாற்றியவர். வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். எழுத்தறிவித்தலில் நன்னன் முறை எனும் புதிய முறையை ஏற்படுத்தியவர்.

சென்னைத் தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் கற்பித்தார். பல பாடநூல்களையும், துணைப்பாட நூல்களையும் எழுதிய நன்னன், 1990-2010 காலகட்டத்தில் சுமார் எழுபது நூல்களை எழுதினார். பெரியார் கொள்கைகளின் மீது பற்று கொண்ட இவர் பெரியார் கொள்கைகள் குறித்து பல நூல்களை எழுதினார். இவர் எழுதிய “பெரியாரைக் கேளுங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. இவர் பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு. வி. க. விருது போன்ற விருதுகளையும் பெற்றவர்.

இவரது பெற்றோர் பெயர் மீனாட்சி, மாணிக்கம். இவரது வாழ்க்கைத் துணைவி ந. பார்வதி. இவருக்கு வேண்மாள், அவ்வை என்ற மகள்களும் அண்ணல் என்ற மகனும் உள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்னும் போரிலும், திராவிட இயக்க உணர்வு பெற்றபின் தமிழிசைக்கிளர்ச்சி, இந்தி எதிர்ப்புப் போர் ஆகியவற்றில் கலந்துகொண்டும், தொடர் வண்டி நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்தும் சிறை சென்றார்.

1942 ஆம் ஆண்டு முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளரியல் ஆகியவை குறித்து பல மேடைகளில் பேசினார்.

தமிழ்ப் பண்ணை:

மா.நன்னன் மக்கள் தொலைக்காட்சியில், அறிவோம் அன்னைமொழி என்ற தலைப்பில் தமிழைப் பிழையின்றி எழுதவும், வாக்கியங்களை அமைக்கவும் நாள்தோறும் தகவலை வழங்கிவந்தார். நிகழ்ச்சியின் வாசகர்களை தமிழ்ப் பண்ணையார்கள் என்று அழைத்தார். தமிழ்ப்பண்ணை நிகழ்ச்சியில் தினமும் காலை 7.30 முதல் 8 மணி வரை தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள நிறை குறைகளையும், குறைகளுக்கான சரியான தீர்வுகளையும் ஆராய்ந்தார்.

நன்னன் எழுதி வெளிவந்த நூல்கள்:

  1. இவர்தாம் பெரியார் 3 சுயமரியாதை – 2012 ஏப்ரல்
  2. இவர்தாம் பெரியார் 1 . தோற்றம் (வரலாறு) – 2001 செப்டம்பர்
  3. இவர்தாம் பெரியார் 2 . போர் (வரலாறு) – 2001 அக்டோபர்
  4. உரைநடையா? குறை நடையா? (மூன்றாம் பதிப்பு)
  5. எல்லார்க்குந் தமிழ் – 1985 ( குறிப்பு – ஆங்கிலமொழியை அறிந்தோர் ஆசிரியர் ஒருவரின் உதவியின்றி தாமே தமிழைப் படிக்கவும், எழுதவும் பெரும் அளவுக்கு உதவும் நோக்கத்தோடு இச்சிறுநூல் உருவாக்கப்பட்டது.)
  6. எழுதுகோலா? கன்னக்கோலா? – 2008 சூலை
  7. கல்விக் கழகு கசடற எழுதுதல் – 2005 சூன்
  8. கெடுவது காட்டுங் குறி – 2009 சூலை
  9. கையடக்க நூல்கள்
  10. சும்மா இருக்க முடியவில்லை – 2012 ஏப்ரல்
  11. செந்தமிழா? கொடுந்தமிழா?
  12. செந்தமிழைச் செத்த மொழியாக்கிவிடாதீர்
  13. தடம் புரள்கிறதா தமிழ் உரைநடை
  14. தமிழ் உரைநடை போகிற போக்கு.., – 2003 அக்டோபர்
  15. தமிழ் எழுத்தறிவோம்
  16. தமிழியல் – தொல், எழுத்தும் சொல்லும் தொடருடன் – 2012 ஏப்ரல்
  17. தமிழைத் தமிழாக்குவோம் – 1
  18. தமிழைத் தமிழாக்குவோம் – 2
  19. தமிழைத் தமிழாக்குவோம் – 2
  20. தவறின்றித் தமிழ் எழுதுவோம்
  21. தவறின்றித் தமிழ் எழுதுவோம் (வழுக்குத் தமிழ்)
  22. தளர்ச்சியின் கிளர்ச்சி பாகம் 1
  23. தளர்ச்சியின் கிளர்ச்சி பாகம் 2
  24. திருக்குறள் மூலமும் விளக்க உரையும் – 2012 ஏப்ரல்
  25. தொல் – பேராசிரியர் உரைத்திறன் – 2012 ஏப்ரல்
  26. நல்ல உரைநடை எழுத வேண்டுமா? – திறனாய்வும் தீர்ப்பும்
  27. நல்ல உரைநடை எழுத வேண்டுமா? (மூன்றாம் பதிப்பு)
  28. நன்னன் கட்டுரைகள்
  29. புதுக்கப்பட்ட பதிப்புகள்
  30. பெரியார் கணினி (இரு தொகுதிகள்)
  31. பெரியார் பதிற்றுப் பத்து – 2007 சனவரி
  32. பெரியாரடங்கல் – 2004 மே
  33. பெரியாரியல் 1 . பொருள் – 1993
  34. பெரியாரியல் 2 . மொழி – 1993 செப்டம்பர்
  35. பெரியாரியல் 3 . இலக்கியம் – 1993 செப்டம்பர்
  36. பெரியாரியல் 4 . கலை – 1993 திசம்பர்
  37. பெரியாரியல் 5 . தாம் – 1994 ஏப்பிரல்
  38. பெரியாரியல் 6 . கல்வி – 1996 ஆகசுடு
  39. பெரியாரியல் 7 . ஒழுக்கம் – 1997 அக்டோபர்
  40. பெரியாரியல் 8 . திருமணம் – 1998 செப்டம்பர்
  41. பெரியாரியல் 9 . கடவுள் – 1998 சூலை
  42. பெரியாரியல் 10 . மதம் – 1998 சூலை
  43. பெரியாரியல் 11 . பார்ப்பனியம் – 2000 ஆகசுடு
  44. பெரியாரியல் 12 . சாதி – 2000 சூலை
  45. பெரியாரியல் 13 . அரசியல் – 2002 அக்டோபர்
  46. பெரியாரியல் 14 . சுயமரியாதை – 2003 அக்டோபர்
  47. பெரியாரியல் 15 . பகுத்தறிவு – 2004 திசம்பர்
  48. பெரியாரியல் 16 . கட்சிகள் – 2004 திசம்பர்
  49. பெரியாரியல் 17 . வாழ்க்கை – 2004 திசம்பர்
  50. பெரியாரியல் 18 . மனிதன் – 2005 சூலை
  51. பெரியாரியல் 19 . தொழிலாளர் – 2005 சூலை
  52. பெரியாரியல் – தாம்
  53. பெரியாரின் உவமைகள்
  54. பெரியாரின் உவமைகள் – 1998 ஆகசுடு
  55. பெரியாரின் குட்டிக் கதைகள்
  56. பெரியாரின் குட்டிக்கதைகள் – 1998 ஆகசுடு
  57. பெரியாரின் பழமொழிகள்
  58. பெரியாரின் பழமொழிகள் – 1998 ஆகசுடு
  59. பெரியாரின் புத்துலகு
  60. பெரியாரின் புத்துலகு
  61. பெரியாரைக் கேளுங்கள்
  62. பெரியாரைக் கேளுங்கள் – 24 குறுமங்கள்
  63. பெரியாரைக் கேளுங்கள் (தொகுப்பு)
  64. பைந்தமிழுரைநடை நைந்திடலாமா? – 2006 சூலை
  65. வாழ்வியல் கட்டுரைகள்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: