திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோவில் சிற்ப கலை!

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோவில் சிற்ப கலை!

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோவில் சிற்ப கலை!

கிருஷ்ணாபுரம் திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலிக்கு 12கி.மீ தொலைவில் குமார கிருஷ்ணப்பா என்ற நாயக்க மன்னரால் இவ்வூரும் கோவிலும் அமைக்கப்பட்டன. வேங்கடாசலபதி கோவில் என அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதப் பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


கிருஷ்ணாபுரம் கோவில் ஒரு வைணவ வழிபாட்டுத் தலம் ஆகும். மதுரை நாயக்க மன்னர் கிருஷ்ணப்பரால் (1564-1572) இக்கோவில் கட்டப்பட்டது. கிருஷ்ணப்பரின் மகன் வீரப்பரின் திருப்பணிகளும் இங்கு உள்ளன. கிருஷ்ணப்பர் நினைவாக இங்குள்ள கோவிலை அடுத்த ஊர் கிருஷ்ணாபுரம் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலிலுள்ள ‘வீரப்பர் மண்டபமும், அரங்க மண்டபமும் உன்னத சிற்பங்களைக் கொண்டுள்ளன. வீரப்பர் மண்டபத்தின் முன்னுள்ள அர்ஜு னன், குறத்தி ராஜகுமாரனைத் தூக்கிச் செல்லுதல், நாடோடிப் பெண்ணின் நடனம், கர்ணன், குறவன் அரசகுமாரியைத் தூக்கிச் செல்லுதல், தேவகன்னியின் நடனம் ஆகிய ஆறு கற்றூண் சிலைகள் யாவரும் பார்த்து வியக்கும் படியாக உள்ளன. அரங்க மண்டபத்திலுள்ள வீரபத்திரன், மன்மதன், பீமன், புருஷாமிருகம், தருமர் ஆகிய சிற்பங்கள் உள்ள கற்றூண்கள், நடனமாது, ரதிதேவியும் தோழிகளும், வீரபத்திரன் ஏவலாளர் ஆகிய சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன. பீமன், புருஷாமிருகம், தருமர் உள்ள கற்றூணின் ஒரு பகுதியில் யானைக்கும், காளைக்கும் ஒரே முகம் இருக்கும் படியாகச் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பது விநோதமாக உள்ளது. கிருஷ்ணாபுரச் சிற்பங்கள் நமது அரிய கலைச் செல்வங்களாகும்.

இக்கோவிலில் உள்ள கற்சிற்பங்கள் கலைநயத்துடன் தத்ருபமாக படைக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இக்கோவிலுள்ள சிலைகளின் அழகைக் சொல்லி மாளாது. தொங்கு மீசையுடன் குறவன் அரசகுமாரியைத் தூக்கிக் கொண்டு செல்லும் போது, பெண்ணின் உடலில் இக்காலத்தில் அணியும் (பிரேசியர்) மார்ப்புக் கச்சை காணப்படுவது வியப்பான செய்தி. சீன முகத்துடன் தேவகணம் படைத்திருப்பது, இப்பகுதியில் சீனர்கள் இருந்ததைத் தெரிவிக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோவில் சிற்ப கலை!

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோவில் சிற்ப கலை!

நாங்குநேரி :

திருநெல்வேலியிலிருந்து 29 கி.மீ. தொலைவில் (நாகர் கோவில் சாலையில்) நாங்குநேரி உள்ளது. இங்குப் புகழ்பெற்ற வைணவ ஆலயம் உள்ளது. இவ்வாலயத்திலுள்ள சிவிலி மண்டபம் ஓர் அரிய கலைப்படைப்பாகும். நாங்குநேரியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் செண்பகராம நல்லூர் உள்ளது. இங்குள்ள சிவன் கோவிலில் காணப்படும் இசைத்தூண் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

இங்குள்ள அரிய சிற்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நாயக்கர் ஆட்சி காலத்தில் கிருஷ்ணப்ப நாயக்கர் விஜயநகர பேரரசில் இருந்து இந்த சிலைகளை வாங்கியதாக கூறப்படுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: