9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை நடுகல் திருப்பூரில் கண்டுபிடிப்பு!

9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை நடுகல் திருப்பூரில் கண்டுபிடிப்பு!

9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை நடுகல் திருப்பூரில் கண்டுபிடிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்குபாளையம் என்ற இடத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அரிய வகையான நடுகல்லைக் கண்டுப்பிடித்துள்ளனர்.

வீரராஜேந்திரன் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த தொல்பொருள் வல்லுநர்கள் சிலர், திருப்பூரிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள பொங்குபாளையம் என்ற இடத்தில், 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் அரிய வகையான நடுகல்லை கண்டுப்பிடித்துள்ளனர்.

பொதுவாக, இறந்தவர்களின் நினைவாக அவர்கள் இறந்த இடத்தில் நடுகல்லை வைக்கும் வழக்கம், பண்டைய காலங்களில் பின்பற்ற வந்தது. அதிலும், குறிப்பாக போரில் மரணமடைந்தவர்களுக்கு நடுகல் அல்லது வீரக் கற்கள் வைக்கப்பட்டன. அதில், அவர்களின் பெயரும் மரணமடைந்த காரணமும் எழுதப்பட்டிருக்கும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த நடுகல்லில் வட்டெழுத்துகள் எனப்படும் பண்டைய தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. அதில் இறந்தவர் பெயர் தேவரு என்பதும், பண்ணை விலங்குகளைப் பாதுகாக்க புலியிடமிருந்து பாதுகாக்க, அதனுடன் சண்டையிட்டு உயிர்நீத்ததும் தெரியவந்துள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: