ஊத்தங்கரை அருகே, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஊத்தங்கரை அருகே, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஊத்தங்கரை அருகே நடுப்பட்டி ஊராட்சி எட்டிப்பட்டி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு தென்பெண்ணை ஆற்றில் நீர் ஓடும் பகுதியில் அமைந்துள்ளதை கண்டறிந்தனர். ஆச்சாரி என்ற இனத்தை சேர்ந்த ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர்களுக்கும், பாவக்கல் பகுதியை சேர்ந்தவர்களுக்கும், தானமாக 60 பங்கு நிலத்தை சரி சமமாக பிரித்து கொடுத்ததை இக்கல்வெட்டு காட்டுகிறது. இக்கல் ஆற்றின் நீர் ஓட்டத்திலேயே இருந்ததால் மிகவும் தேய்மானம் அடைந்துள்ளது. 10 அடி உயரம் கொண்ட இந்த கல்லை அங்குள்ளவர்கள் சாசனக்கல் என்று அழைத்து வருகின்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


மேலும், 15 வரிகள் கொண்ட இக்கல்லில் வேடர்பட்டி, பாவக்கல், ஊத்தங்கரை, எட்டிப்பட்டி என்ற தற்போதுள்ள ஊரின் பெயர்கள் வருகின்றன. லக்கம்பட்டி என்பது லக்கம்பட்டினம் என கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் 300 ஆண்டுகளுக்கு முன்பு லக்கம்பட்டியினுடைய பெயர் லக்கம்பட்டினம் என்று பெரிய ஊராக இருந்திருக்கலாம். அதே போல் திருமானூர் என்ற ஊரின் பெயர் மருவி திருவனப்பட்டி என்றும், வெங்களப்பட்டி என்ற ஊரின் பெயர் மருவி வேங்கடத்தாம்பட்டி என்றும் மாறியிருக்க வாய்ப்பு உண்டு என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: