திருவாடானை அருகே கி.பி16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவாடானை அருகே கி.பி16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவாடானை அருகே கி.பி16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கள்ளிக்குடியில், கி.பி16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரையை பாண்டியர்களிடமிருந்து டெல்லி சுல்தான்கள் கைப்பற்றிய பின், நாயக்க மன்னர்கள் காலம் வரை தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பாண்டியர்களின் ஆட்சி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர், திருவாடானை அருகில் உள்ள கள்ளிக்குடி சீனிவாசப் பெருமாள் கோயிலில், கி.பி16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


கோயில் நுழைவுவாயிலில் உள்ள கல்வெட்டு பற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறுகையில்,

‘அரும்பொற்கூற்றத்து கள்ளிக்குடியில் இருக்கும் தீக்கொல்லர் சொக்கர் ஆண்டார் என்பவர், பெருமாள் கோயில் எதிரில் உள்ள குளத்தைத் தானமாக வெட்டிக் கொடுத்துள்ளார். தீக்கொல்லர் என்பது இரும்புக் கொல்லராக இருக்கலாம். திரிபுவனச் சக்கரவர்த்திகள், ஸ்ரீசீவல்லத்தேவர் எனும் பாண்டிய மன்னரின் 27-வது ஆட்சியாண்டில் சார்வரி வருஷம் பங்குனி 1 அன்று, தானம் வழங்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேல்பகுதியில் சில வரிகள் அழிந்துள்ளன. இந்தத் தானத்துக்கு யாராவது அழிவுசெய்தால், அவர்கள் கங்கைக்கரையிலும் சேதுக்கரையிலும் காராம்பசுவைக் கொன்ற பாவம் எய்துவார்கள் என்றும், திருக்கோயில்களில் திருட்டுப் பாவம் எய்துவார்கள் என்றும் கல்வெட்டின் ஓம்படைக்கிளவி கூறுகிறது.

தானத்துக்கு அழிவு செய்தால், அவர்களுக்கு எவ்வித பாவம் ஏற்படும் என்பதைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பகுதி, ஓம்படைக் கிளவி ஆகும். விஜய நகர, நாயக்கர் காலக் கல்வெட்டு அமைப்பில் இது இருக்கிறது. கூடுதலாக, சேதுக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவமும் சொல்லப்பட்டுள்ளது. திருப்புல்லாணி அருகில் உள்ள சேதுக்கரை, கங்கைக்கரைக்கு இணையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூரைச் சேர்ந்த கண்ணாளரான பெரிய நாயன் குலசேகரக் கொல்லன் என்பவர், அரசாங்க அதிகாரியான முதலிகள் சொல்லியபடி, இதை எழுதிக் கையெழுத்திட்டுள்ளார். இக்கல்வெட்டில் உள்ள தமிழ் ஆண்டு மற்றும் எழுத்தமைதியைக்கொண்டு, இதன் காலம் கி.பி.1541 எனக் 365ர் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: