திருவண்ணாமலை அருகே 12-ஆம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை அருகே 12-ஆம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை அருகே 12-ஆம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை அருகே தென்முடியனூரில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தென்முடியனூர் பகுதியில் கள ஆய்வு செய்த போது, அங்கு ஏரியில் உள்ள தூம்பில் கல்வெட்டு இருப்பது தெரியவந்தது.

கல்வெட்டில், 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கரமசோழன் ஆட்சிக் காலத்தில் பெண்ணை வடகரை மேற்கோவலூர் நாட்டு கோவலூரைச் சேர்ந்த இலச்சியமுடையான் உழியன் மாதன் என்பவர் சோழாந்தகப் பல்லவராயன் வடுகன் ஆளவந்தான் நினைவாக இந்தத் தூம்பினை அமைத்துக் கொடுத்துள்ளார்.

“இந்தத் தூம்பினை காப்பவர்கள் காலடியை என் தலைமேல் காப்பேன்’ என்ற வாசகமும் கல்வெட்டின் இறுதியில் அமைந்துள்ளது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் அமைத்த தூம்பு இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

அந்தக் காலத்தில் மன்னர்கள் நீர்நிலைகளை உருவாக்கவும், அதை பாசனத்துக்கு முறைப்படுத்தவும் தூம்புகள் அமைத்த விதம் சிறப்புக்குரியதாகும். இதுபோன்று, ஏரியில் உள்ள தூம்புகளை மேலும் ஆய்வு செய்யும்போது, அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனம், வேளாண்மை பற்றிய வரலாறுகள் தெரிய வரும் என்று வரலாற்று ஆய்வர்கள் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: