திருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் கால வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் கால வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் கால வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் காலத்து வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசியர்கள் முத்தமிழ், பிரபு ஆகியோர், திருப்பத்தூர் அருகே, சல்லியூர் கிராமத்தில் ஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் கால வீரமங்கையின் நடுகல்லை கண்டுபிடித்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சல்லியூரில் கண்டெடுக்கப்பட்ட நடுகல், ஒரு வீரப் பெண்ணுக்காக அமைக்கப்பட்டதாகும். இதில் காணப்படும் வீரமங்கை, இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி உள்ளார். இடையில் கச்சையுடன் சிறிய கத்தியும் வைத்துள்ளார். போர் புரியும் போது அணியும் ஆடையை அணிந்துள்ளார். அவரது காலில் வீரக்கழல், கழுத்தில் ஆபரணம், காதில் வளையம், தலையில் நீண்ட கூந்தலை முடித்து பெரிய கொண்டை போட்டுள்ளார். இந்த சிற்பம், கல்லில் குடைத்து செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லின் சிற்ப வேலைப்பாடுகளை வைத்துப் பார்த்தால், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால சோழன் காலத்தை சேர்ந்ததாக தெரிகிறது. தம் பகுதியை மீட்கப் போர் புரிந்து, வீர மரணம் அடைந்த பெண்ணுக்காக, இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையரிடம் இருந்து தம் ஊரை காப்பாற்ற போராடி, வீர மரணம் அடைந்த பெண்ணின் நினைவாகவும், இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம்.

தமிழகத்தில் இதுவரை கிடைக்கப்பட்ட நடுகற்களில் பெண்களுக்கென எடுக்கப்பட்ட நடுகற்கள் எண்ணிக்கையில் குறைவேயாகும். அவ்வகையில் இந்த நடுகல் பெண்ணுக்கென எடுக்கப்பட்ட சிறப்பான நடுகற்களின் வரிசையில் முக்கிய இடம்பெறுகிறது. அக்காலத்தைய பெண்களது வீரத்தினைப் பறைசாற்றும் விதத்தில் இந்த நடுகல் காணப்படுகிறது. இக்கல் ஐந்தரை அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்டது. ஒரு காலத்தில் மிகப்பெரிய வேப்பமரத்தின் அடியில் நடப்பட்டிருந்த இந்த நடுகல், நாளடைவில் மரம் வெட்டப்பட்ட நிலையில், கல் சிதையத் தொடங்கியுள்ளது. “பட்டாளம்’ என்பது படையினைக் குறிக்கும் சொல்லாகும். இவ்வீரமங்கை நடுகல்லுக்கும், இக்கோயிலுக்கும் இருக்கும் தொடர்பினை இதன் வாயிலாக அறியலாம். இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: