உலகத் தமிழர் பேரவை இன்று, தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது!

உலகத் தமிழர் பேரவை இன்று, தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது!

உலகத் தமிழர் பேரவை இன்று, தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது!

உலக முழுக்க உள்ள தமிழர்கள், தங்கள் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகம் செய்தோதை நினைக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டு நவம்பர் 27ம் தேதி மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று காலை சுமார் 11 மணிக்கு சென்னையில் அண்ணா சாலையில் உள்ள உலகத் தமிழர் பேரவையின் அலுவலகத்தில் தமிழறிஞர் ஐயா திரு. அரு. கோபாலன் அவர்களின் தலைமையில் உறுதி மொழியும், உரையும் நிகழ்த்தப்பட்டது. ஈகை புரிந்து அந்த மாவீரர்களுக்கு இறுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வுக்கு, உலகத் தமிழர் பேரவையில் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி, பட்டய கணக்கர் திரு. கோபி நாராயணன், திரு. தனஞ்செயன், திரு. சந்திர மோகன், திரு. ஜீபிடர் ரவி, அலுவலக பொறுப்பாளர்கள் செல்வி வாசுகி, ஆனந்தி இன்னும் பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மதுரை மாவட்ட கிளையின் சார்பாக இன்று மாவீரர் நாள் அஞ்சலி!

மதுரை மாவட்ட கிளையின் சார்பாக இன்று மாவீரர் நாள் அஞ்சலி!

மதுரை மாவட்ட கிளையின் சார்பாக இன்று மாவீரர் நாள் அஞ்சலி!

உலகத் தமிழர் பேரவையின் தமிழ் வளர்த்த மதுரையில், மதுரை மாவட்ட கிளையின் சார்பாக கீழ்கண்ட முகவரியில் இன்று மாவீரர் நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

15, சோனையார் கோயில் தெரு,
(நோயாஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கு எதிர்புரம்),
நாரிமேடு,
மதுரை

இந்நிகழ்ச்சிக்கு பேரவையின் மதுரை பொறுப்பாளர் திரு. நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: